காதலர்களுடன் ஊர் சுற்றுவது!. பிரிந்த பிறகு அவர்கள் மீதே பலாத்கார புகாரளிப்பது- ஹரியாணா முதல்வர்
Recommended Video

சண்டீகர்: பிரிந்து சென்ற காதலர்களை திரும்ப பெறுவதற்காகவே பொய்யான பாலியல் புகார்களை அளிப்பதாக ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சண்டீகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் கட்டார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அண்மைகாலமாக ஹரியாணாவில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவது தவறு.
பலாத்காரங்கள் முன்பு கூட நடந்தன. தற்போதும் நடக்கின்றன. இது மிகவும் கவலையளிக்கிறது. 80 முதல் 90 சதவீதம் பெண்கள் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களால்தான்.

சர்ச்சை
ஆண் நண்பர்களுடன் நாள் கணக்கில் சுற்றித் திரிக்கிறார்கள். ஒரு நாள் திடீரென அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. இதையடுத்து அந்த நபர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக பெண்கள் புகார் கூறுகின்றனர் என்று கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வருத்தம்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரன்தீப் சுரேஜ்வாலா கூறுகையில் பெண்கள் குறித்து முதல்வர் கூறிய கருத்து வருந்தத்தக்கது. இந்த கருத்து கட்டார் அரசு பெண்களுக்கு எதிரான மனநிலையை கொண்டது என்பதையே வெளிப்படுத்துகிறது. பலாத்காரங்கள், கூட்டு பலாத்காரங்கள் முழுவதுமாக தடுக்க முடியாமல் பெண்கள் மீது குற்றம் சொல்வது வருத்தத்துக்குரியதாகும் என்றார்.

சுதந்திரம்
இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில் ஒரு மாநில முதல்வரே இதுபோல் பேசினால் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பர். பலாத்காரங்களை முதல்வர் நியாயப்படுத்துகிறார். இதனால்தான் ஹரியாணாவில் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன. பலாத்காரம் செய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பி சுதந்திரமாக சுற்றி வருகின்றனர் என்றார்.

சர்ச்சை
இதுபோல் பெண்கள் மீது கட்டார் குற்றச்சாட்டுவது முதல் முறையல்ல.கடந்த 2014-ஆம் ஆண்டு கட்டா கூறுகையில் பெண்கள் ஒழுங்காக ஆடை அணியாததே பெரும்பாலான பலாத்காரங்கள் நடக்கின்றன. ஒரு பெண் நன்றாக ஆடை அணிந்திருந்தால் அவரை ஒரு ஆண் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டான் என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications