ஹரியானாவில் ஆட்டத்தை மாற்றிய "ஜாட்" வாக்குகள்.. பாஜகவை துடைத்தெறிய காரணமே இதுதான்!
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் இப்போது வெளியாக ஆரம்பித்துள்ளது. இதில் முதற்கட்ட தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது காங்கிரஸ் ஆட்சியை அமைக்கவே வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது. ஹரியானாவில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு ஜாட் மக்களின் வாக்குகள் முக்கிய காரணமாகும்.
ஹரியானாவில் மொத்தம் 90 சீட்கள் உள்ள நிலையில், அங்கு எல்லா தொகுதிகளுக்கும் கடந்த சனிக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் பெரியளவில் ஆர்வமாக வாக்களிக்கவே வந்தனர்.

ஹரியானா தேர்தல்: இதற்கிடையே இப்போது அங்குத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இதில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே இப்போது முன்னிலையில் உள்ளன. இதே டிரெண்ட் தொடர்ந்தால் நிச்சயம் காங்கிரஸ் கட்சியை ஆட்சியைப் பிடிக்கும். அதாவது சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை ஆட்சியைப் பிடிக்கும்.
காங்கிரஸ் கட்சி அங்கு வெல்ல முக்கியமான ஜாட் மக்களின் வாக்குகளே முக்கிய காரணமாகும். ஜாட் மக்கள் பாஜக மீது கடும் கோபத்தில் இருந்தனர். விவசாயிகள் போராட்டத்தில் பெருமளவு ஜாட் விவசாயிகளே ஈடுபட்ட நிலையில், அதை பாஜக கையாண்ட விதம் ஜாட் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கோபம்: 3 விவசாய சட்டங்களும் வாபஸ் பெறப்பட்ட போதிலும், அந்த நேரத்தில் ஹரியானா பாஜக அரசும் சரி, மத்திய பாஜக அரசும் சரி போராட்டத்தைக் கையாண்ட விதத்தை அவர்கள் மறக்கவில்லை. மேலும், அப்போது பாஜக தலைவர்கள் சொன்ன சில கருத்துகளும் கொந்தளிப்பையே ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் கூட கங்கனா இது குறித்து சர்ச்சை கருத்துகளையே கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. ஜாட் மக்கள் இதனால் பாஜக மீது கடும் கோபத்தில் இருந்தனர்.
ஜாட் மக்கள்: ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை ஜாட் மக்கள் எப்போதும் பாஜக ஆதரவாக இருந்ததே இல்லை. அவர்கள் எப்போதும் காங்கிரஸ் நிலைப்பாட்டிலேயே இருப்பார்கள். கடந்த 2 தேர்தல்களில் ஜாட் மக்கள் வாக்குகள் ஜேஜேபி மற்றும் ஐஎன்எல்டி கட்சிகளுக்குச் சென்றது. ஆனால், இந்த முறை பாஜக மீதான கோபத்தால் ஜாட் மக்கள் வாக்குகள் அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ளது.
ஹரியானாவில் ஜாட் பெரும்பான்மை உள்ள தொகுதிகள் மொத்தம் 36 இருக்கிறது. அதாவது இந்த தொகுதிகளில் ஜாட் மக்கள்தொகை சுமார் 30%க்கு மேல் உள்ளது. அதில் தற்போது வரை வெளியான தேர்தல் முடிவுகளில் சுமார் 20+ தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் இருக்கிறது. ஜாட் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாக்களிக்கத் தொடங்கியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications