ஹரியானாவில் ஆட்டத்தை மாற்றிய "ஜாட்" வாக்குகள்.. பாஜகவை துடைத்தெறிய காரணமே இதுதான்!
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் இப்போது வெளியாக ஆரம்பித்துள்ளது. இதில் முதற்கட்ட தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது காங்கிரஸ் ஆட்சியை அமைக்கவே வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது. ஹரியானாவில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு ஜாட் மக்களின் வாக்குகள் முக்கிய காரணமாகும்.
ஹரியானாவில் மொத்தம் 90 சீட்கள் உள்ள நிலையில், அங்கு எல்லா தொகுதிகளுக்கும் கடந்த சனிக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் பெரியளவில் ஆர்வமாக வாக்களிக்கவே வந்தனர்.

ஹரியானா தேர்தல்: இதற்கிடையே இப்போது அங்குத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இதில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே இப்போது முன்னிலையில் உள்ளன. இதே டிரெண்ட் தொடர்ந்தால் நிச்சயம் காங்கிரஸ் கட்சியை ஆட்சியைப் பிடிக்கும். அதாவது சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை ஆட்சியைப் பிடிக்கும்.
காங்கிரஸ் கட்சி அங்கு வெல்ல முக்கியமான ஜாட் மக்களின் வாக்குகளே முக்கிய காரணமாகும். ஜாட் மக்கள் பாஜக மீது கடும் கோபத்தில் இருந்தனர். விவசாயிகள் போராட்டத்தில் பெருமளவு ஜாட் விவசாயிகளே ஈடுபட்ட நிலையில், அதை பாஜக கையாண்ட விதம் ஜாட் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கோபம்: 3 விவசாய சட்டங்களும் வாபஸ் பெறப்பட்ட போதிலும், அந்த நேரத்தில் ஹரியானா பாஜக அரசும் சரி, மத்திய பாஜக அரசும் சரி போராட்டத்தைக் கையாண்ட விதத்தை அவர்கள் மறக்கவில்லை. மேலும், அப்போது பாஜக தலைவர்கள் சொன்ன சில கருத்துகளும் கொந்தளிப்பையே ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் கூட கங்கனா இது குறித்து சர்ச்சை கருத்துகளையே கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. ஜாட் மக்கள் இதனால் பாஜக மீது கடும் கோபத்தில் இருந்தனர்.
ஜாட் மக்கள்: ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை ஜாட் மக்கள் எப்போதும் பாஜக ஆதரவாக இருந்ததே இல்லை. அவர்கள் எப்போதும் காங்கிரஸ் நிலைப்பாட்டிலேயே இருப்பார்கள். கடந்த 2 தேர்தல்களில் ஜாட் மக்கள் வாக்குகள் ஜேஜேபி மற்றும் ஐஎன்எல்டி கட்சிகளுக்குச் சென்றது. ஆனால், இந்த முறை பாஜக மீதான கோபத்தால் ஜாட் மக்கள் வாக்குகள் அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ளது.
ஹரியானாவில் ஜாட் பெரும்பான்மை உள்ள தொகுதிகள் மொத்தம் 36 இருக்கிறது. அதாவது இந்த தொகுதிகளில் ஜாட் மக்கள்தொகை சுமார் 30%க்கு மேல் உள்ளது. அதில் தற்போது வரை வெளியான தேர்தல் முடிவுகளில் சுமார் 20+ தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் இருக்கிறது. ஜாட் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாக்களிக்கத் தொடங்கியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications