Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயி பற்றி தப்பாவா பேசுறீங்க.. கங்கனா ராணாவத் கன்னத்தில் பாதுகாப்பு படை பெண் காவலர் பளார்

Subscribe to Oneindia Tamil

சண்டீகர்: சண்டீகர் விமான நிலையத்தில் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் மத்திய பாதுகாப்பு படை பெண் காவலர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டார் கங்கனா ரனாவத். இவர் 5,37,022 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் 4,62,267 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.

kangana ranaut chandigarh

இருவருக்குமான வித்தியாசம் 74,755 ஆகும். கங்கனா இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர். சண்டிகர் விமான நிலையத்திற்கு கங்கனா ரனாவத் வந்தார். அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் அதிகாரியுடன் ஏதோ வாக்குவாதம் நடந்தது. அப்போது திடீரென அந்த அதிகாரி, கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா தீவிரவாதிகள் என விமர்சித்ததற்காக அந்த பெண் பாதுகாப்பு அதிகாரி கங்கனா கன்னத்தில் அறைந்தார். இது குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சர்ச்சைகளின் நாயகி: இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த கங்கனா ரனாவத் 2006 ஆம் ஆண்டு பாலிவுட்டில் நுழைந்து நிறைய படங்களில் நடித்துள்ளார். அண்மையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்திலும் தமிழில் அவர் நடித்துள்ளார்.

பிரபல நடிகையாக இருந்தாலும் இவருக்கு சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. பாலிவுட்டில் வாரிசுகளின் பிள்ளைகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து பேசியுள்ளார். கரண் ஜோஹர் உள்பட பலரை அவர் வெளிப்படையாகவே தாக்கி பேசியுள்ளார்.

அது போல் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தையும் கங்கனா கொச்சைப்படுத்தி பேசியிருந்தார். அது போல் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கனா, "காலிஸ்தானி பயங்கரவாதிகள் இன்று அரசை தங்களுக்கு ஏற்றப்படி வளைக்கலாம். ஆனால் நாட்டின் ஒரே ஒரு பெண் பிரதமர் (இந்திரா) அவர்களைத் தனது ஷூவில் போட்டு நசுக்கினார்.

அவர் ( இந்திரா) இந்த தேசத்திற்கு எவ்வளவு துன்பம் கொடுத்திருந்தாலும் கொசுக்களைப் போல் தன் உயிரைப் பணயம் வைத்து அவர்களை (காலிஸ்தானி பயங்கரவாதிகளை) நசுக்கினார். அவர் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்றும் அவரது (இந்திரா) பெயரைக் கேட்டால் அவர்கள் நடுங்குகிறார்கள். அவரை போன்ற ஒரு நபர் தான் இப்போது தேவை" எனப் பதிவிட்டுள்ளார்.

அது போல் சீக்கியர்களை காலிஸ்தானியர்கள் என்றும் 1984 ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் குறித்தும் அவர் கூறிய கருத்துகள் மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தனை சர்ச்சைக்களுக்கும் நாயகியான கங்கனாவுக்கு பாஜக சீட் தராது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் அவருக்கு மண்டி லோக்சபா தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. அவரும் எம்பியாகிவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+