திக்திக்.. பஞ்சாப்பில் பதற்றம்.. சினிமா பாணியில் ஸ்கெட்ச்..காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் கைது
காலிஸ்தான் பிரிவினை வாதம் பேசி வரும் பஞ்சாப்பின் பிரிவினைவாத ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கை இன்று கைது செய்ததால் பதற்றம் நிலவும் நிலையில் நாளை வரை அங்கு இன்டர்நெட் சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் காலிஸ்தான் பிரிவினைவாதம் தலைத்தூக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் காலிஸ்தான் பிரிவினைவாதம் பேசி பதற்றத்தை ஏற்படுத்திய அம்ரித்பால் சிங் என்பவரை இன்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சந்தித்து இதுபற்றி ஆலோசித்த நிலையில் சரியாக ஸ்கெட்ச் போட்டு அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது பஞ்சாப்பில் பதற்றம் நிலவுவதால் நாளை மதியம் வரை இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் அதிகளவில் சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பஞ்சாப்பை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் தனி நாடு என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் இந்த கோரிக்கைகள் எழாமல் இருந்த நிலையில் மீண்டும் தலைத்தூக்கி உள்ளது. இந்தியாவில் இருந்து பஞ்சாப்பை பிரிக்க உலகின் பல இடங்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பின்னணியில் பாகிஸ்தான் என குற்றச்சாட்டு
மேலும் இந்த வாக்கெடுப்பின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக இங்கிலாந்தில் வசித்து வரும் முன்னாள் காலிஸ்தான் ஆதரவு தலைவரான ஜஸ்வந்த் சிங் தகேதார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பஞ்சாப்பில் வசிப்பவர்கள் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. இருப்பினும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் அறிவுறுத்தலில் வெளிநாடுகளில் உள்ள சிலர் இது குறித்து பேசி வருகிறார்கள். பாகிஸ்தான் கொடுக்கும் பணத்துக்காக இப்படி செயல்படுகின்றனர் என தெரிவித்து இருந்தார்.

அம்ரித்பால் சிங் அட்டகாசம்
இந்நலையில் இந்தியாவின் பஞ்சாபில் வசிக்கும் அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். இவர்களுக்கு பின்னாலும் பாகிஸ்தான் உள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார். அம்ரித்பால் சிங் என்பவர் நடிகர் தீப் சித்துவால் தொடங்கப்பட்ட ‛வாரிஸ் பஞ்சாப் தே'' என அமைப்பின் தலைமை பொறுப்பில் உள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் ஜல்லு புர் கைரா பகுதியை சேர்ந்த இவர் துபாயில் வேலை செய்தார். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார். இதையடுத்து அவர் காலிஸ்தான் பிரிவினை பேசி வந்தார்.

கண்வைத்த போலீஸ்
காலிஸ்தான் பிரிவினையில் தீவிரம் காட்டிய ஜர்லைன் சிங் பிந்தரன்வாலேவை குறிப்பிடும் வகையில் அம்ரித்பால் சிங்கை அவரது ஆதரவாளர்கள் ‛பிந்திரன்வாலே 2.0' என அழைத்து வந்தனர். மேலும் அம்ரித்பால் சிங்கும் தன்னை பிந்தரன்வாலேயின் சீடர் என கூறிக்கொண்டு சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வந்தார். இதையடுத்து அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் மீது போலீசார் கண்வைத்தனர்.

உதவியாளர் கைதால் மோதல்
கடந்த மாதம் அம்ரித்பால் சிங்கின் உதவியாளரான லவ்ப்ரீத் டூபன் கடத்தல் வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அஜ்னாலா காவல் நிலையம் அம்ரித்பால் சிங் தலைமையில் முற்றுகையிடப்பட்டது. போலீசாருக்கும், அம்ரித்பால் சிங் ஆதரவாளர்களுக்கும் இடையே வாள் சண்டை நடந்தது. மேலும் காலிஸ்தான் பிரிவினை வாதம் பேசி ஆட்களை சேர்க்க அவர் திட்டமிட்டு செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அம்ரித்பால் சிங் அதிரடி கைது
இந்நிலையில் தான் அம்ரித்பால் சிங் ஜலந்தரின் ஷாகோட் பகுதிக்கு இன்று வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இந்நிலையில் அம்ரித்பால் சிங் தனது ஆதரவாளர்களுடன் இன்று காரில் சென்றார். இதையடுத்து காலிஸ்தான் பிரிவினைவாதம் பேசும் அம்ரித்பால் சிங்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சினிமா பாணியில் அவரை விரட்டி மடக்கி போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்கெட்ச் போட்டி தூக்கிய போலீஸ்
இந்த அதிரடி நடவடிக்கை என்பது சரியான திட்டமிடலுடன் கையாளப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 2ம் தேதி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அம்ரித்பால் சிங் பற்றி பேசப்பட்ட நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய கைது நடவடிக்கையை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் பாதுகாப்பு பணிக்காக போலீஸ் படைகளை பஞ்சாப்பிற்கு அனுப்பி வைத்தது. பஞ்சாப்பில் நேற்று ஜி20 மாநாட்டுக்கான கூட்டங்கள் முடிவடைந்த நிலையில் அடுத்த நடவடிக்கையாக அம்ரித்சிங் பாலை போலீசார் கைது செய்துள்ளனர்.

இணையதள சேவைகள் முடக்கம்
இந்த சம்பவத்தால் தற்போது பஞ்சாப்பில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாருடன், மத்திய பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வதந்திகள் பரவாமல் இருக்க நாளை மதியம் 12 மணி வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications