என்னாது.. பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியாவோடு இணையுமா.. பாஜக முதல்வர் பளீர் யோசனை!
சண்டிகர்: ஜெர்மனி நாடு இணைக்கப்பட்டது போல, பாகிஸ்தானையும் வங்காளதேசத்தையும் இந்தியாவோடு இணைத்துவிடலாம் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் சிறுபான்மை பிரிவு ஆலோசனை பயிற்சிக்கூட்டமான மைனாரிட்டி மோர்ச்சா கூட்டம் குருகிராமில் உள்ள பாஜக மாநிலக்கூடத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
நேற்று நடந்த இந்த கூட்டத்தை அரியானா முதல்வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான மனோகர் லால் கட்டார் தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் ஒருங்கிணைக்க முடியும் என்றால் பாகிஸ்தானையும் வங்காளதேசத்தையும் இந்தியாவுடன் இணைப்பது சாத்தியமானதே. இந்தியாவில் ஜனநாயக முறைப்படி பழங்குடியின பெண் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். நமது இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம்.
இந்தியாவில் ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்கும் அதே நேரத்தில், வங்காளதேசத்திலும் பாகிஸ்தானிலும் சண்டைகள் நடைபெற்று வருகின்றன. மற்றொரு நாட்டில் ஜனாதிபதி தப்பி ஓடுகிறார். அங்கு அமைதி இல்லை. பாஜகவின் பிரதான இலக்கு என்னெவென்றால், இந்தியாயவை உலக நாடுகளின் தலைவராக்குவதே ஆகும். என்று பேசியுள்ளார்.
மெலும் அவர் கூறுகையில், ''சங் பரிவார் இயக்கங்கள் மீது பயத்தை காட்டி சிறுபன்மை மக்கள் மத்தியில் பாதுகாப்பின்மை உணர்வை காங்கிரஸ் ஏற்படுத்தியது. ஆனால், பாஜகவின் செயல் மற்றும் வார்த்தைகளை மக்கள் படிப்படியாக புரிந்துகொள்ள தொடங்கியுள்ளனர். காங்கிரஸின் சிந்தனை மற்றும் சித்தாந்தத்தையும் சிறுபான்மையினர் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். 1984 ஆம் ஆண்டு லோக்சபாவில் பாஜகவுக்கு வெறும் 2 சீட்டுக்கள் மட்டுமே கிடைத்தன.
ஆனால் 12 ஆண்டுகள் கழித்து அடல் விகாரி வாஜ்பாய் ஆட்சி அமைத்தார். பிற கட்சிகளை சார்ந்து அப்போது ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால் 2014 ஆம் ஆண்டு மோடி அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தற்போது மைனாரிட்டிகள் மத்தியிலும் பாஜக மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக முஸ்லீம்கள் மத்தியில் பாஜக மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்றார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கிளர்ச்சி வெடித்தது. அதிபர் ராஜபக்சே பதவி விலகக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகைக்குள் புகுந்ததனர். இதனால், அதிபர் மாளிகையில் இருந்து ஓடிய கோத்தபய ராஜபக்சே, மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் பாகிஸ்தானிலும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. இதை குறிப்பிட்டு தான் தற்போது அரியானா முதல்வர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தது.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு












Click it and Unblock the Notifications