"அவருக்காக பாக். பிரதமர் நேரடியாக பேசினார்.." அமரிந்தர் சிங் அடுத்த அட்டாக்! நவ்ஜோத் சித்து கப்சிப்
சண்டிகர்: பஞ்சாப் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நவ்ஜோத் சிங் சித்து குறித்து முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப். 20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் மற்ற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இதனால் அங்கு ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.

பஞ்சாப் காங்கிரஸ்
ஆனால், கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அமரிந்தர் சிங்கிற்கும் சித்துவுக்கும் இடையே இருந்த மோதல் அதிகரித்ததால் தான் அமரிந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்த நீக்கப்பட்டார். அதன் பின்னர் சரன்ஜித் சிங் சன்னி முதல்வராக்கப்பட்ட நிலையில், அவருடனும் கூட சித்து சுமுகமான போக்கைக் கொண்டிருக்கவில்லை.

அடுத்த அட்டாக்
இது பஞ்சாப் காங்கிரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எளிதாக வெல்ல வேண்டிய தேர்தலில் காங்கிரஸ் வலியத் தோல்வியடைய அனைத்து முயற்சிகளையும் செய்வதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்தச் சூழலில் நவ்ஜோத் சிங் சித்து குறித்து முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன்னிடம் சித்துவுக்கு ஆதரவாகப் பேசியதாக அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து வந்த கால்
அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த நவ்ஜோத் சித்து கடந்த 2019இல் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது தான் பாக். பிரதமர் தன்னிடம் சித்துவுக்கு பேசியதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சித்து அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட உடன் பாகிஸ்தான் நாட்டில் இருந்து எனக்கு ஃபோன் கால் வந்தது.

பிரதமர் இம்ரான் கான்
அப்போது பாகிஸ்தான் பிரதமர், சித்து தனது பழைய நண்பர் என்றும் அவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்றும் குறிப்பிட்டார். மேலும், அமைச்சர் பொறுப்பை அவர் சரிவரச் செய்யவில்லை என்றால் நீங்கள் அவரை நீக்கலாம் என்றும் பாக். பிரதமர் என்னிடம் தெரிவித்தார்" என்றும் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அமரிந்தர் சிங்கின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்து அமைதி
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சித்துவும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சித்து பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்று அந்நாட்டின் ராணுவ தளபதி உடன் இருப்பது போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. இது இந்திய ராணுவத்தில் சேவை புரிந்த அமரிந்தர் சிங்கிற்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் அதன் பின்னரே இருவருக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்ததாக கூறப்படுகிறது.

பஞ்சாப் தேர்தல் களம்
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது 5 முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 117 இடங்களில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனித்துக் களமிறங்குகின்றனர். மறுபுறம் அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் பாஜக உடன் இணைந்து களமிறங்குகிறது. இது தவிர அகாலி தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும் கூட்டணி அமைத்துத் தேர்தலில் களமிறங்குகிறது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications