4 மாதம் முன்.. பஞ்சாப் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்.. 110 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட கதை
4 மாதங்களுக்கு முன் பஞ்சாப்பில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ஒருவர் 110 மணி நேரங்களுக்கு பின் மீட்கப்பட்டார்.
Recommended Video
சண்டிகர்: 4 மாதங்களுக்கு முன் பஞ்சாப்பில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ஒருவர் 110 மணி நேரங்களுக்கு பின் மீட்கப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இவரை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த 72 மணி நேரமாக சுஜித்தை மீட்கும் பணி நடந்து வருகிறது. சுஜித் தற்போது ஆழ்துளை கிணற்றில் 88 அடியில் சிக்கி இருக்கிறார்.

பஞ்சாப் சம்பவம்
இதேபோல் ஒரு சம்பவம் பஞ்சாப்பின் சங்கூர் பகுதியில் நடந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த பட்வீர் சிங் என்ற இரண்டு வயது சிறுவன், வீட்டிற்கு பின் புறம் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். முதலில் 40 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவன் போக போக கீழே விழுந்து அதிக ஆழத்தில் சிக்கினான்.

சிறுவன்
105 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் அந்த சிறுவன் பட்வீர் சிங் 100 அடி ஆழத்தில் சிக்கி இருந்தான். இதனால் அவனை கயிறு கட்டி இழுக்கவோ ரோபோ வைத்து தூக்கவோ முடியவில்லை. இதனால் அவன் விழுந்த குழாய்க்கு அருகிலேயே இன்னொரு சுரங்கம் தோண்டினார்கள். சுமார் 100 அடிக்கு சுரங்கம் தோண்டினார்கள்.

நேரம் ஆனது
இந்த சுரங்கம் தோண்ட முழுதாக மூன்று நாட்கள் ஆனது. அதன்பின் சரியாக 108 மணி நேரம் கழித்து முழுதாக சுரங்கம் தோண்டப்பட்டது. அதன்பின் அங்கிருந்து சிறுவனை மீட்க இன்னும் நேரம் ஆனது. கடைசியில் 110 மணி நேரம் கழித்து பட்வீர் சிங் மீட்கப்பட்டான்.
|
வெறும் 9 இன்ச்
அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வெறும் 9 இன்ச் மற்றும் சுற்றளவு கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில் 5 நாட்கள் அந்த சிறுவன் இருந்ததால் மூச்சு விட முடியாமல் பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் சிறுவனின் உடலை சோதித்துவிட்டு கூறினார்கள். இந்த சம்பவம் பஞ்சாப்பை உலுக்கியது குறிப்பிடத்தக்கது.
-
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications