"ஹரியானா வன்முறைக்கு பின்னணியில் பெரும் சதி" சந்தேகம் கிளப்பும் முதல்வர் மனோகர் லால் கட்டார்!
சண்டிகர்: ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் பேரணியின் போது மற்றொரு தரப்பினருடன் மோதல் ஏற்பட்டு பெரும் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறைக்கு பின்னணியில் பெரும் சதி இருப்பது போல தெரிவதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் துவக்கத்தில் மெய்தி - குக்கி இன மக்களிடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் மணிப்பூர் மாநிலத்தையே வன்முறைக்காடாக மாற்றி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இன்னும் கூட அங்கு இயல்பு நிலை திரும்பாமல்தான் உள்ளது. இந்த வேதனைக்கு பாஜக ஆட்சி நடைபெற்று வரும் ஹரியானாவில் நேற்று இரு பிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

அதாவது, ஹரியானாவில் நூ மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியில் அந்த அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த பேரணி குருகிராம் - அல்வார் தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த போது வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் அடங்கிய குழு ஒன்று பேரணியை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்ந்து வன்முறையாக மாறியது. கல்வீசி தாக்கிக் கொண்டதோடு வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 5 பேர் பலியாகியுள்ளனர். போலீசார் உள்பட 7-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஹரியானாவில் ஏற்பட்ட இந்த மோதலால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அப்பகுதியில் 144 - தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
மொபைல் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில், இந்த வன்முறை சம்பவத்தால் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த வன்முறைக்கு பின்னணியில் பெரும் சதி இருப்பதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் சந்தேகம் கிளப்பியுள்ளார். இது தொடர்பாக மனோகர் லால் கட்டார் கூறுகையில், நூ மாவட்டத்தில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. பல இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த வன்முறைகளுக்கு பின்னால் பெரும் சதி இருப்பது போல தெரிகிறது. யாத்திரையாக வந்தவர்கள் மீதும் போலீசார் மீது தாக்குதல் நடத்த சிலர் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். நூ மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் போடப்பட்ட்டுள்ளது. இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 70 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications