மணமகளை வரவேற்க.. கட்டுக்கட்டாக வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்.. மொத்தம் ரூ.8.50 கோடியா? வீடியோ
சண்டிகர்: பஞ்சாப்பில் நடந்த திருமணத்தின்போது மணமகன் ரூ.8.50 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை எடுத்து மணப்பெண்ணின் மீது வீசி வரவேற்றதாக இணையதளங்களில் வீடியோ பரவி வருகிறது. இதனை பார்த்து அனைவரும் வியப்படைந்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் அதுபற்றி மணமகனின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் திருமணம் என்பது மாறுபடும். திருமணத்தின்போது மணமகன், மணமகள் தரப்பில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள் கிராமத்துக்கு கிராமம் வேறுபடுகிறது. அந்த வகையில் பஞ்சாப்பில் திருமணத்தின்போது மணமகள் மீது பணநோட்டுகளை வீசி வரவேற்பது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. பணமழை பெய்வது போல் மணமகள் மீது மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுகின்றனர்.

அதாவது மணமகள் திருமண நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் மையப்பகுதியில் நிற்கிறார். அவர் அருகே மணமகன் நிற்கிறார். அவர் தான் வைத்திருக்கும் பேக்கில் இருக்கும் பணத்தை எடுத்து மணமகள் மீது வீசுகிறார். இந்த நோட்டுகள் மழை போல் மேலிருந்து கீழாக மணமகள் மீது விழுகிறது. அதேபோல் மணமகனின் குடும்பத்தினரும் சுற்றி நின்று பணத்தை அள்ளி மணமகள் மீது வீசுகின்றனர். மணமகள் நிற்கும் இடத்தை சுற்றிய தரை முழுவதும் ரூபாய் நோட்டுகள் நிரம்பி உள்ளன.
இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது பிப்ரவரி 14ல் பஞ்சாபின் தர்ன் தாரனில் நடந்த ஒரு திருமணத்தில், மணப்பெண் மீது ரூ.8.5 கோடி ரூபாய் நோட்டுகளை தூவி மணமகன் வரவேற்றதாக தகவல்கள் பரவி வருகிறது.
இதனை பார்க்கும் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். ஒரு தரப்பினர் புகழ்ந்து தள்ளும் நிலையில் இன்னொரு தரப்போ இது ஆடம்பரம்.. தேவையில்லாத செலவு. இதுபற்றி வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த வீடியோ தொடர்ந்து பரவி வருகிறது.
இதற்கிடையே தான் இந்த சம்பவம் பற்றி மணமகனின் சகோதரர் சகோதரர் சிக்கந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார். திருமணத்தில் ரூ.8.50 கோடி மதிப்பிலான பணம் வீசப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதுபற்றி சிக்கந்தர் சிங்கூறுகையில், ‛‛திருமண விழாவில் மணமகள் மீது பணம் வீசியது உண்மை தான். ஆனால் அந்த தொகை மிகைப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தான் மணப்பெண் மீது வீசப்பட்டது. என் சகோதரர் ஆஸ்திரேலியாவில் லாரி தொழில் செய்து வருகிறார்'' என்றார்.
அதேபோல் திருமண நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மேலாளர் கூறுகையில், ‛‛விழாவில் ரூ.8.50 கோடி பயன்படுத்தப்படவில்லை. டாலர் நோட்டுகளையும் சேர்த்து மொத்தம் சுமார் 4 லட்சம் ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் என பரவும் தகவல் பொய்யானது'' என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications