சென்னை: விடாது கொட்டிய 8 மணி நேர பெருமழை-செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறப்பு
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று 8 மணிநேரம் இடைவிடாமல் கொட்டிய பெருமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 1,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
Recommended Video
வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என்பது சென்னை வானிலை மையத்தின் கணிப்பு. ஆனால் இன்று யாருமே கணிக்காத நிலையில் சென்னையில் பெருமழை இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 8 மணிநேரம் மேகவெடிப்பைப் போல மழை தொடர்ச்சியாக வெளுத்து வாங்கியது. சென்னை அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் ஒரே நாளில் கொட்டி வெளுத்த கனமழையால் ஒட்டுமொத்த மாநகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

கடுமையாக பாதித்த போக்குவரத்து
சென்னை நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடு ஓடுவதாலும் பல அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நிற்பதாலும் வாகன போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு இடத்தையும் கடப்பதற்கு பல மணிநேரம் ஆனது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள்தான் பொதுமக்களுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்து வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையும் தற்போது இரவு 12 மணிவரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

3 சுரங்க பாதைகள் மூடல்
வெள்ள நீர் தேங்கி இருப்பதால் கங்குரெட்டி சுரங்கப் பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன. சென்னை நகரின் பல பகுதிகளிலும் வாகனப் போக்குவரத்து மெதுவாக இருப்பதாகவும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மேலும் சில மணிநேரம் கனமழை வெளுக்கும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.

செம்பரம்பாக்கம் ஏரி
இடைவிடாது பெய்யும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி சுமார் 98% நிரம்பி இருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
இதனைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர் வரத்து வினாடிக்கு 2,900 கன அடியாக உள்ளது. இந்த நீர் வரத்து அதிகரித்தால் உபரி நீர் திறப்பும் மேலும் அதிகரிக்கப்படலாம் என்கின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications