தமிழகத்தில் மேலும் 1,141 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,00,029 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்தது. அண்மைகாலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

மேலும் 1,141 பேருக்கு உறுதி
தற்போது மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவுக்கு அடுத்ததாக கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 63,989 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மேலும் 1,141 பேருக்கு கொரோனா உறுதியானது.

8 லட்சத்தை தாண்டியது
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,00,029 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் மேலும் 14 பேர் மரணம் அடைந்தனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 11,909.

இன்று 1,203 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் இன்று மட்டும் 1,203 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 7,78,081 ஆகும்.

தமிழகத்தில் 1.30 கோடி பரிசோதனைகள்
தமிழகத்தில் மொத்தம் 1,30,20,594 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் தமிழகத்தில் மொத்தம் 10,039 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் (ஆக்டிவ் கேஸ்கள்).

சென்னையில் 343 பேருக்கு கொரோனா
சென்னையில் இன்று மேலும் 343 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னைக்கு அடுத்ததாக கோவையில் மேலும் 124 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications