சென்னைக்கு எடுத்து வரப்பட்ட1.2 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள்
சென்னை: மும்பையிலிருந்து மேலும் 1.2 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை எடுத்து வரப்பட்டன.
தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த வரும் மே 24ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பொதுமக்களுக்குத் தடுப்பூசிகள் போடுவதைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஆனால் மத்திய அரசு தேவையான அளவு தடுப்பூசி மருந்துகளை ஒதுக்காததால், தடுப்பூசிக்கு பல்வேறு மாநிலங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை பாதிப்பு தீவிரமாக உள்ளதால் தடுப்பூசி பணிகளை விரைவாக மேற்கொள்ள கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசைத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று ஒரு லட்சத்து 20 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளைத் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது. இந்த மருந்துகள் மும்பையில் உள்ள மத்திய மருந்து தொகுப்பு கிடங்கிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை எடுத்து வரப்பட்டன.
10 பாா்சல்களில் வந்த 290 கிலோ எடையுடைய இந்த 1.2 லட்சம் டோஸ் தடுப்பூசிகளைத் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டனர்.
அதன்பின்பு, தடுப்பூசிகள் குளிர்சாதன வசதியுடைய வாகனத்தில் ஏற்றப்பட்டு, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ள மருந்து பாதுகாப்பு அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த தடுப்பூசி விரைவில் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications