குறையும் பாதிப்பு.. தமிழ்நாட்டில் இன்று 1,604 பேருக்கு கொரோனா.. 25 பேர் பலி!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,604 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது. ஊரடங்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்ட பின்பும் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. கொரோனா கேஸ்கள் குறைந்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டில் தியேட்டர்கள், கடற்கரைகள் திறக்கப்பட்டது.
செப்டம்பர் 1ம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. மூன்றாம் அலை செப்டம்பர் மாதம் தொடங்கலாம் என்று வல்லுனர் குழு எச்சரித்த போதிலும் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா கேஸ்கள் உயரும் அறிகுறி தெரியவில்லை.

இன்று கேஸ்கள்
தமிழ்நாட்டில் இன்று 1,604 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 25 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 34,734 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.தமிழ்நாட்டில் இன்று 1,863 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.

சென்னை
சென்னையில் இன்று 172 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 2095 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 195 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 2215 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 143 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 1673 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை
தமிழ்நாட்டில் இதுவரை 25,48,868 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 18,887 ஆக குறைந்து உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 26,02,489 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

சோதனை
தமிழ்நாட்டில் இன்று 1,53,068 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,52,447 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 4,01,71,505 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications