நீதிமன்ற உத்தரவால் ஒரு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 பரிசு இல்லை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தடை- வீடியோ

    சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் ஒரு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 1000 பரிசு பொருட்கள் இல்லை.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    1 crore people wont get Pongal gift as Rs 1000

    இந்நிலையில் கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் தொடர்ந்த வழக்கில் அனைத்து கார்டுகளுக்கு வழங்கும் பொங்கல் பரிசு பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 2.1 கோடி ரேஷன் கார்டுகளில் 1.30 கோடி முன்னுரிமை அல்லாத அட்டைகளாகும்.

    எனவே முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைதாரர்கள் 1.30 கோடி பேருக்கு பொங்கல் பரிசான ரூ 1000 கிடைக்காது. PHH என்ற முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு மட்டும் ரூ .1000 பொங்கல் பரிசு தர அனுமதி வழங்கப்படுகிறது.

    அதுபோல் AYY அந்தியோதயா அன்னயோஜனா கார்டுதாரர்கள் பரிசு பெற தகுதியானவர்கள் ஆவர். அது போல் NPHH, NPHH-S கார்டுகளுக்கும் ரூ .1000 பரிசு கிடையாது. மற்றபடி இவர்கள் அனைவருக்கும் அரிசி,வெல்லம், கரும்பு , முந்திரி- திராட்சை- ஏலக்காய் வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+