ஒரே நேரத்தில் 10,176 பேர் பரதநாட்டியம்.. சென்னை அருகே.. புதிய கின்னஸ் சாதனை
சென்னை: சென்னை அருகே ஒரே இடத்தில் 10,176 பேர் பரதநாட்டியம் ஆடி புதிய கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தினர். முன்னதாக 7190-பேர் ஒரே நேரத்தில் பரத நாட்டியம் நடத்தியதுதான் சாதனையாக இருந்தது.
தமிழக அரசு சுற்றுலாத்துறை சார்பில் சதிர் 10000 என்ற தலைப்பில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரே இடத்தில் பரதநாட்டியம் ஆடும் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

கின்னஸ் நடுவர் சோப்பியா கலந்து கொண்டு பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனையை நேரடியாக பார்வையிட்டார்.
இதில் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை இயக்குநர் அமுதவல்லி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி சிதம்பரத்தில் 7190 பேர் கலந்து கொண்டு ஒரே இடத்தில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடத்தியதே இதுவரை கின்னஸ் உலக சாதனையாக திகழ்ந்து வந்தது.
அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இன்று தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற 10,176 பேர் கலந்து கொண்ட பரதநாட்டியம் ஆடி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. அதற்கான சான்றிதழை கின்னஸ் நடுவர் சோப்பியா வழங்கினார்.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications