ஒரே நேரத்தில் 10,176 பேர் பரதநாட்டியம்.. சென்னை அருகே.. புதிய கின்னஸ் சாதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே ஒரே இடத்தில் 10,176 பேர் பரதநாட்டியம் ஆடி புதிய கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தினர். முன்னதாக 7190-பேர் ஒரே நேரத்தில் பரத நாட்டியம் நடத்தியதுதான் சாதனையாக இருந்தது.

தமிழக அரசு சுற்றுலாத்துறை சார்பில் சதிர் 10000 என்ற தலைப்பில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரே இடத்தில் பரதநாட்டியம் ஆடும் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

10,176 people set a new Guinness World Record for perform Bharata Natyam

கின்னஸ் நடுவர் சோப்பியா கலந்து கொண்டு பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனையை நேரடியாக பார்வையிட்டார்.

இதில் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை இயக்குநர் அமுதவல்லி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி சிதம்பரத்தில் 7190 பேர் கலந்து கொண்டு ஒரே இடத்தில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடத்தியதே இதுவரை கின்னஸ் உலக சாதனையாக திகழ்ந்து வந்தது.

அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இன்று தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற 10,176 பேர் கலந்து கொண்ட பரதநாட்டியம் ஆடி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. அதற்கான சான்றிதழை கின்னஸ் நடுவர் சோப்பியா வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+