தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை இருக்கு.. லிஸ்ட்டில் உங்கள் மாவட்டம் இருக்கானு பாருங்க பாஸ்!
சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளளது.
Recommended Video
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, வேலூர், திருவண்ணாமலை, தேனி, நெல்லை, உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை நேரங்களிலும் இரவிலும் அதிக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

காற்றின் திசை
இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

லேசான மழை
அந்த வகையில் கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டையிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

நீலகிரி மாவட்டம்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவானது. மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

புயல் கரையை கடக்கும்
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் உள்ள ஆம்பன் புயலால் நேற்றைய தினம் சில இடங்களில் மழை பெய்தது. சென்னையிலும் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. நாளை மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே ஆம்பன் புயல் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications