சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் பதவியேற்பு.. நீதிபதிகள் எண்ணிக்கை 63ஆக உயர்வு
சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் பதவியேற்பு.. நீதிபதிகள் எண்ணிக்கை 63ஆக உயர்வு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 நீதிபதிகளும் இன்று பதவியேற்னர்.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த
1.சந்திரசேகரன்
2.நக்கீரன்
3.வி.சிவஞானம்
4.இளங்கோவன்
5.ஆனந்தி
6.கண்ணம்மாள்
7.எஸ்.சதிக்குமார்
8.முரளி சங்கர்
9.மஞ்சுளா
10.தமிழ்ச்செல்வி

ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து 10 புதிய நீதிபதிகளும் பதவியேற்றனர் இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ. பி சாஹி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் மாவட்ட நீதிபதிகளில், முரளிசங்கர்-தமிழ் செல்வி ஆகியோர் கணவன் - மனைவி ஆவார்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் பதவிகள் 75 என்ற போதும், தற்போது 53 ஆக உள்ள நிலையில், இவர்கள் நீதிபதிகளாக பதவியேற் பின்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது காலியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications