ஏற்கனவே கட்டி உருளுவார்கள்.. இப்போது 10 சீட்டுக்கு என்னவெல்லாம் நடக்க போகுதோ காங்கிரஸில்
10 சீட்களை வைத்துக்கொண்டு காங்கிரஸ் அதை எப்படி பிரித்து கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: 10 தொகுதி வாங்கியாச்சு சரி.. ஆனால் இதை யாருக்குன்னு பிரிச்சு தரப்போகுது காங்கிரஸ் என்பதுதான் கேள்வி!
மாநிலத்தில் இருக்கிற கட்சிகளிலேயே எக்கச்சக்க கோஷ்டி சண்டை இருப்பது தமிழக காங்கிரசில்தான். எப்பவுமே கோஷ்டி பூசல், எப்பவுமே தகராறு, எப்பவுமே உட்கட்சி விவகாரம் என நீண்டு கொண்டே இருக்கும். இந்த பிரச்சனையை மட்டும் அகில இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களால் அப்போதிருந்தே தீர்க்கப்படாமலேயே உள்ளது.
திருநாவுக்கரசர் அணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் அணி, சிதம்பரம் அணி, தங்கபாலு அணி என தனித்தனி அணிகளும், அவர்களுக்குள்ளே கோஷ்டி பூசல்களும் நிலவி வருகிறது.

கட்டி புரளுவார்கள்
இவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை கட்சியில் பொறுப்பாளர்களாக நியமிப்பது, பிறகு வேண்டாதவர்களை நீக்குவது, நீக்கப்பட்ட அணியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்குவது, டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் முறையிடுவது பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் செயல்பட்டு வருபவர்கள். கடந்த காலங்களில் சத்திய மூர்த்தி பவனில் கட்டி புரண்டு உருண்டு எழுந்த கதை தமிழகமே அறியும்.

போட்டியிட ஆர்வம்
இப்போது விஷயம் என்னவென்றால், தமிழக காங்கிரஸில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவருமே இந்த முறைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிவருகிறார்கள் என்பதுதான். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு கோஷ்டியும் காங்கிரஸ் மேலிடத்திடம் கடந்த சில நாட்களாகவே சீட் கேட்டு வலியுறுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

உடன்பாடு
கடைசியில் 10 சீட் என்று முடிவாகி இருக்கிறது. இதில் பாண்டிச்சேரியை விட்டுவிடுவோம். மற்ற 9 சீட்டுகளை எடுத்து கொண்டால் யாருக்கென்று தருவார்கள். நேற்றிரவு கையெழுத்தான இந்த உடன்பாட்டின் மூலம் ஸ்டாலின் ஒன்றும் பெரிய அளவில் எதையும் சாதிக்கவில்லை. டெல்லியில் இருந்து பெரிய தலைகளை தமிழகத்துக்கு வரவழைத்து எடப்பாடி 5 மட்டுமே கொடுத்து கெத் காட்டினார்.

இளங்கோவன்
ஆனால் இவ்வளவு நாள் கூடவே இருக்கும் ஒரு கட்சிக்கு 10 கொடுத்து ஒரு கையெழுத்து மட்டுமே போட்டு முடித்துள்ளார் ஸ்டாலின். இருந்தாலும் இந்த 9 சீட்கள் யாருக்கு என்று கொடுப்பார்கள். இளங்கோவனும், திருநாவுக்கரசரும் கண்டிப்பாக ஆளுக்கொன்று எடுத்து கொள்வார்கள். அதேபோல தான் ப.சிதம்பரம் கேட்கிறாரோ இல்லையோ, விசுவாசத்தை காட்ட கண்டிப்பாக முயல்வார் கே.எஸ்.அழகிரி.

நெட்டிசன்கள்
அதனால் கோஷ்டிக்கு ஒரு சீட் என்றாலும் இந்த 9 சீட் பத்தாமல்தான் போகும் என தெரிகிறது. ஏற்கனவே கட்டி உருளுவார்கள், இப்போது இந்த காங்கிரஸ் கோஷ்டி என்ன செய்ய போகிறதோ என்று நெட்டிசன்கள் சீண்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications