உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள்... சென்னை மாநகராட்சி வெளியீடு
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம் ஆகும். எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துளளது.
கொரோனா வைரஸ் தொற்று வராமல் தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவது போன்றவற்றை செய்ய வேண்டும் என அரசு அறிவிறுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள உணவு பழக்கத்திலும் சில மாற்றங்களை செய்து கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இதன்படி காலை ஒரு வேளை கபசுர குடிநீர் பருக வேண்டும்
அவ்வப்போது சூடான தண்ணீர் குடிக்க வேண்டும்
உப்பு மற்றும் மஞ்சள் கலந்த மிதமான வெந்நீரில் காலை மாலை என இருவேளை வாய் கொப்பளிக்க வேண்டும்.
துளசி அல்லது வேப்பிலையில் மஞ்சள் பொடி மற்றும் உப்பு கலந்த நீரில் நீராவி பிடிக்க வேண்டும்.
மஞ்சள் கலந்த பாலில் மிளகு பொடி கலந்து காலை மாலை இரு வேளையும் பருக வேண்டும்.
இவை இல்லாமல் மூலிகை டீ மற்றும் வேப்பம் பூ ரசம், தூதுவளை ரசம், மிளகு ரசம் இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.
அன்னாச்சி, ஆரஞ்சு, சாத்துக்குடி பழச்சாறு அருந்தலாம்
தினமும் 15 முதல் 20 நிமிடம் காலை 7.30மணிக்குள் அல்லது மாலை 5 முதல் 6 மணிக்குள்ளாக சூரியக் குளியல் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுளளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications