வேகமாக பரவும் காய்ச்சல்.. சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதி!
சென்னை: சென்னையில் காய்ச்சலால் ஒரே நாளில 100- க்கும் மேற்பட்ட குழந்தைகள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் ஜூன், ஜூலை மாதங்களில் 4ஆவது அலை தீவிரமடையும் என சொல்லப்பட்டது. ஆனால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. தற்போது பரவும் கொரோனா கடந்த 2ஆவது அலையை போல் தீவிரமாக இல்லை.
பாசிட்டிவிட்டி ரேட்டும் 10 கீழே குறைவாகவே உள்ளது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.

தமிழகத்தில் மர்ம காய்ச்சல்
இதனால் மக்கள் மகிழ்ச்சியாக 2019 ஆம் ஆண்டுக்கு முன்பு எப்படி இருந்தார்களோ அது போல் தற்போதும் இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. ஒரு வாரம் வரை காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை இருக்கின்றன. குழந்தைகள், பெரியவர்கள் என பலருககு சளி இருமல் காய்ச்சல் பரவி வருகிறது.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை
இந்த நிலையில் சென்னையில் உள்ள எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதிகளவில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் படுக்கைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

300 படுக்கைகள்
இந்த மருத்துவமனையில் காய்ச்சல் வார்டில் மொத்தம் 300 படுக்கைகள் உள்ளன. இவை நிரம்பி கொண்டே வருவதை போல் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. மேற்கண்ட மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மழை, வெயில்
மழை, வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக குழந்தைகளுக்கும் பெரியவர்களுககும் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக இந்த வைரஸ் காய்ச்சல் தொற்று குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது அதிகளவில் பரவி வருகிறது. எனவே குழந்தைகளுக்கு தடுப்பூசியை தவறாமல் செலுத்த வேண்டும் என தொற்று நோய் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications