100 யூனிட் இலவச மின்சாரம் இனி கிடையாதா? - அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன பரபர தகவல்!
சென்னை : 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ஆகிய திட்டங்கள் தொடரும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மத்திய அரசு இலவச திட்டங்கள் வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கிறது. ஆனால், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்குவதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் புதிய மின்திட்டங்களை செயல்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

வித்தியாசம் பார்க்காமல்
தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தொகுதிவாரியாக செய்யப்பட உள்ள புதிய பணிகளை, குறிப்பாக, துணைமின் நிலையங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவற்றை இந்த அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள். இந்த ஆண்டு ரூ.2,300 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்த விதமான வித்தியாசமும் பாராமல், அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களைச் சந்தித்து அவர்கள் தொகுதியில் செயல்படுத்த வேண்டிய மின்திட்டங்களைக் கேட்டறிந்து செயல்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டிரான்ஸ்பார்மர்கள்
திமுக அரசு பதவியேற்ற கடந்த ஓராண்டில், தமிழகம் முழுவதும் 28,085 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் பூமிக்கடியில் மின்சார கேபிள்கள் அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும். இந்த ஆண்டு காற்றாலை, சூரியசக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் முழுவதையும் மின்வாரியம் பயன்படுத்தியது. இவ்வாறு பயன்படுத்தியது இதுவே முதல்முறை. இதன்மூலம், ஒரு யூனிட் மின்சாரம் கூட வீணாகவில்லை என உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

100 யூனிட் இலவச மின்சாரம்
100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட இலவச திட்டங்கள் தொடர்ந்து செயல்படும். இலவச திட்டங்களே இருக்கக் கூடாது என்பது ஏற்புடையதல்ல. ஆனால், மத்திய அரசு இலவச திட்டங்கள் வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்குவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

விவசாயிகளுக்கு
விவசாயிகளின் வாழ்க்கையில், அவர்களின் வருமானத்தில் என்ன மிச்சப்படுத்த முடியும்? விவசாயிகளின் முதலீட்டிற்கும், கடைசியாக இருக்கக்கூடிய வருமானத்தையும் பார்க்கும்போது மிகப் பெரிய இழப்பை சந்திக்ககூடிய நிலை இருக்கிறது. எனவே விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications