Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று தொடங்குகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. 9.55 லட்சம் பேர் பங்கேற்பு.. என்னென்ன ரூல்ஸ் பாருங்க

தமிழகம், புதுச்சேரியில் இன்று நடக்கிறது 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.. இதில், 9.55 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

Recommended Video

    தொடங்கியது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு... மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதும் மாணவர்கள்!

    கடந்த 2 வருட காலமாகவே, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.. பிள்ளைகளுக்கு ஆன்லைன் மூலம்தான் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    தற்போது பள்ளிகள் திறந்து செயல்பட்டு வரும் நிலையில், பொதுதேர்வையும் நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வி துறை தீவிரமான கவனத்தை செலுத்தியது.

    நெறிமுறைகள்

    நெறிமுறைகள்

    அந்த வகையில், நேற்றைய தினம் பிளஸ் 2 தேர்வுகள் மாநிலம் முழுவதும் தொடங்கி உள்ளன.. நேற்று தொடங்கி 28 ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற உள்ளது.. அதேபோல இன்றைய தினம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது.. தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இந்த தேர்வினை எழுதவுள்ளனர்.

     சிறை கைதிகள்

    சிறை கைதிகள்

    குறிப்பாக, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் பள்ளிகள் மூலம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ-மாணவியர் எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 30 ஆயிரத்து 765 பேரும் தேர்வில் பங்கேற்கின்றனர். புதுச்சேரியில் மட்டும், 16 ஆயிரத்து 802 மாணவ - மாணவியர் பங்கேற்க உள்ளனர். இதற்காக மாநிலம் முழுதும், 3,936 தேர்வு மையங்களும், தனி தேர்வர்களுக்கு, 147 மையங்கள் மற்றும் சிறை கைதிகளுக்கு 9 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    முதல்தேர்வு

    முதல்தேர்வு

    முதல் நாளான இன்று மொழிப்பாடத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 51ஆயிரத்து 710 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 308 இடங்களில் கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள், 308 மையங்களில் இருந்து வினியோகம் செய்யப்படுகின்றன.தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

     ரிசல்ட் எப்போது?

    ரிசல்ட் எப்போது?

    பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் செய்யப்பட்டுள்ளது... 10ம் வகுப்புக்கான அனைத்து பாடத் தேர்வுகளும் வரும் 30ல் முடிகின்றன. ஜுன் 17ல் தேர்வு முடிவை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+