10ஆம் வகுப்பு மார்க் ஷீட்டில் ஏதேனும் தவறா? திருத்தம் செய்ய உடனடி வாய்ப்பு.. யூஸ் பண்ணிக்கோங்க!
சென்னை: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பெயர், விவரங்கள் ஆகியவற்றில் ஏதேனும் பிழை இருந்தால், அவற்றை திருத்தம் செய்ய தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், அந்த மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால் மாற்றிக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், உயர்கல்வி, வேலை, பாஸ்போர்ட் எடுப்பது போன்ற பல விஷயங்களுக்கு அடிப்படைச் சான்றாக கருதப்படும். இதில் ஏதேனும் தவறு இருந்தால், கண்டிப்பாக மாற்ற வேண்டி வரும். எனவே தேர்வுத்துறை இயக்குநரகம் வழங்கியுள்ள வாய்ப்பை பயன்படுத்தி இப்போதே மாற்றிக் கொள்ளலாம்.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட உதவி தேர்வு இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் தலைப்பு எழுத்து, பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பள்ளியின் பெயர் ஆகியவற்றில் பிழை இருந்தால் திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் சேர்த்து தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் செப்டம்பர் 8-ஆம் தேதிக்குள் மாவட்ட தேர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.
அவ்வாறு திருத்தங்கள் கோரி வரும் அசல் மதிப்பெண் சான்றிதழ் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக உதவி இயக்குநர்கள் செப்டம்பர் 22-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், தனித்தேர்வர்களிடம் இருந்து பெறப்படும் அசல் சான்றிதழ்களை உரிய ஆவணங்களுடன் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications