10ஆம் வகுப்பு மார்க் ஷீட்டில் ஏதேனும் தவறா? திருத்தம் செய்ய உடனடி வாய்ப்பு.. யூஸ் பண்ணிக்கோங்க!
சென்னை: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பெயர், விவரங்கள் ஆகியவற்றில் ஏதேனும் பிழை இருந்தால், அவற்றை திருத்தம் செய்ய தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், அந்த மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால் மாற்றிக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், உயர்கல்வி, வேலை, பாஸ்போர்ட் எடுப்பது போன்ற பல விஷயங்களுக்கு அடிப்படைச் சான்றாக கருதப்படும். இதில் ஏதேனும் தவறு இருந்தால், கண்டிப்பாக மாற்ற வேண்டி வரும். எனவே தேர்வுத்துறை இயக்குநரகம் வழங்கியுள்ள வாய்ப்பை பயன்படுத்தி இப்போதே மாற்றிக் கொள்ளலாம்.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட உதவி தேர்வு இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் தலைப்பு எழுத்து, பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பள்ளியின் பெயர் ஆகியவற்றில் பிழை இருந்தால் திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் சேர்த்து தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் செப்டம்பர் 8-ஆம் தேதிக்குள் மாவட்ட தேர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.
அவ்வாறு திருத்தங்கள் கோரி வரும் அசல் மதிப்பெண் சான்றிதழ் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக உதவி இயக்குநர்கள் செப்டம்பர் 22-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், தனித்தேர்வர்களிடம் இருந்து பெறப்படும் அசல் சான்றிதழ்களை உரிய ஆவணங்களுடன் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications