இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை மையம் செம நியூஸ்.. எங்கு தெரியுமா?
இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும், வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் மழை என்று வானிலை மையம் கூறியுள்ளது.
Recommended Video
சென்னை: இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும், வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் மழை என்று வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த வாரம் தமிழகத்தில் தொடங்கிய மழை இன்னும் விடவில்லை. இன்னும் 4 நாட்களுக்கு அங்கு மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை கடைசி கட்டத்தில் மிக தீவிரமாக பெய்து வருகிறது.
முக்கியமாக சென்னையில் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சென்னையில் அதிக அளவில் ஏரிகள் நிரம்பி உள்ளது.

என்ன நிலை
வடகிழக்கு பருவமழை இந்த வாரத்தோடு முடியும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையும். வடகிழக்கு பருவமழை முடியும் முன் கண்டிப்பாக நல்ல மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எங்கு எல்லாம்
அதன்படி இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும். திருவண்ணாமலை, காஞ்சிபுரம், பெரம்பலூர், தஞ்சாவூர், கடலூர், சென்னை, நாகப்பட்டினம், திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

வெப்பசலனம்
இந்த மழை வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கின் சுழற்சி காரணமாக இருக்கும். இதனால் காலையில் வெயில் அடிக்கும். அதன்பின் கடுமையான மழை பெய்யும். இரவு நேரத்தில் அதிகமாக மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை நிலை
சென்னையில் இதனால் நன்றாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று மதியத்திற்கு பின் நன்றாக மழை பெய்யும். இந்த மழை வானிலை இன்னும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது .












Click it and Unblock the Notifications