அடுத்த அதிரடி.. 11 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்! புயல் போல அதிகாரிகளுக்கு ஆட்டம் காட்டும் தமிழக அரசு
சென்னை: தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆவடி, கோவை, மதுரை மாநகராட்சிகளின் ஆணையர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக அரசு அவ்வப்போது பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அந்தவகையில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்த எல்.மதுபாலன் மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி ஆணையராக சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாநகராட்சி ஆணையராக சிவ கிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டிவனம் சார் ஆட்சியராக இருந்த கட்டா ரவி தேஜா சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையராக இருந்த தர்ப்பக ராஜ், உயர்கல்வித் துறையின் துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த கே.ஜே.பிரவின் குமார் சென்னை மாநகராட்சியின் மத்திய மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞாஞதேவ்ராவ், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி சார் ஆட்சியராக பணியாற்றி வந்த பிரியங்கா, திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, முக்கியமான 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து நேற்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டிருந்தார். அதற்கு முன்பாக கடந்த 11ஆம் தேதியன்றும் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications