அமரேஷ் பூஜாரி உள்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி பிரதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அரசு நிர்வாக வசதிகளுக்காக அவ்வப்போது உயர் அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் நடைபெறுவது வழக்கம். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பணியிட மாறுதலுக்கு உட்படுத்தப்படுவாரக்ள். அந்த வகையில், இன்று ஐபிஎஸ் அதிகாரிகள் 11 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

* சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு காவல் இணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி தர்மராஜன் நியமனம்.
* மதுரை தெற்கு காவல் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி நியமனம்.
* கள்ளக்குறிச்சி எஸ்.பியாக சமய்சிங் நியமனம்.
* திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி பிரதீப் நியமனம்.
* திண்டுக்கல் எஸ்.பியாக இருந்த பாஸ்கரன், சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சிறைத்துறை டிஜிபியாக இருக்கும் அம்ரேஷ் பூஜாரி, தமிழ்நாடு காகித ஆலை நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* பிரமோத் குமார் ஐபிஎஸ் TANGEDCO வின் டிஜிபி/ தலைமை விஜிலன்ஸ்
அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சந்திரசேகரன் ஐபிஎஸ்- சிவில் சப்ளைஸ் சிஐடி/ கோவை மண்டலம்.












Click it and Unblock the Notifications