Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் பேரிச்சம் பழம் சாகுபடி! ஏக்கருக்கு ரூ.12,000 மானியம்! தமிழக வேளாண் பட்ஜெட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பேரிச்சைப்பழம் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.12,000 மானியம் வழங்கப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் 2024-2025ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அப்போது அறிவிப்பு வெளியிட்ட அவர், தூத்துக்குடி, வேலூர், தருமபுரி, கரூர் ஆகிய மாவட்டகளில் 250 ஏக்கர் பரப்பளவில் பேரிச்சை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பு வருமாறு;

12,000 per acre subsidy to encourage dates cultivation in Tamil Nadu

பேரீச்சை சாகுபடி: இரும்பு சத்து அதிகமுள்ள பேரீச்சை சாகுபடியை தமிழ்நாட்டில் 250 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்ய, 30 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கப்படும்.

முந்திரி சாகுபடி: தமிழ்நாட்டில், முந்திரி இரண்டு இலட்சத்து ஏழாயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டிற்கு சுமார் 43,500 மெட்ரிக் டன் முந்திரிப் பருப்பு உற்பத்தியாகிறது. மேலும், 4 இலட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு முந்திரி பதப்படுத்தும் வசதிகள் இருந்தும், அதற்கான மூலப்பொருளான முந்திரி 10 சதவீதம் மட்டுமே இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, முந்திரி சாகுபடிப் பரப்பை அதிகரித்து உற்பத்தியை உயர்த்திட 2 கோடியே 36 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும், தரமான முந்திரியை விளைவிக்க இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், 2,470 ஏக்கர் பரப்பளவில் செயல்விளக்கம் அமைத்திட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மிளகாய் பயிர் ஊக்குவிப்புத் திட்டம்: கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, 2,470 ஏக்கர் பரப்பில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு மிளகாய் பயிரிடப்பட்டது. 2024 2025 ஆம் ஆண்டிலும், மிளகாய் மண்டலம் ஏற்படுத்தப்பட்ட பகுதிகளான இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க, 1,230 ஏக்கர் பரப்பில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு மிளகாய் சாகுபடி செய்யப்படும். மேலும், நெல், இதர தானியங்களின் அறுவடைக்குப்பின்பு, 3,700 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் பயிரிட ஊக்குவிக்கப்படும்.

12,000 per acre subsidy to encourage dates cultivation in Tamil Nadu

இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களில் 200 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு நீர் ஆதாரங்கள் ஏற்படுத்தப்படும். இதற்கென, 3 கோடியே 67 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

மரவள்ளியில் மாவுப்பூச்சி: மரவள்ளி அதிகமாகப் பயிரிடப்படும் மாவட்டங்களில் ஏற்படும் மாவுப்பூச்சி தாக்குதலால் உற்பத்தி குறைந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த உர, பூச்சி மேலாண்மைக்காக 21,000 ஏக்கருக்கு, ஒரு கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+