திமுக தேர்தல் அறிக்கை 2021: திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை உட்பட 12 முக்கிய வாக்குறுதி!
சென்னை: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையின் 12 முக்கிய வாக்குறுதிகள்:
- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

- உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண முதலமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்படும்.

- அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்

- தமிழக சட்ட மேலவை மீண்டும் கொண்டு வரப்படும்

- பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டுத் திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும்.

- சென்னையில் திராவிட இயக்கத் தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்

- கொரோனா பேரிடரால் வாழ்வாதாரம் இழந்த தமிழக குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்'

- ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டு - முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் ஜூன் 3 ஆம் நாளன்று அமல்படுத்தப்படும்

- பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் - டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்

- சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும் திட்டம் - முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் ஜூன் 3 ஆம் நாளன்று அமல்படுத்தப்படும்.

- மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்படும்

- நியாய விலைக்கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் - உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்

இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications