2 சுவர்களுக்கு மத்தியில் சிக்கி கொண்ட நித்தீஷ்.. 2 மணி நேர போராட்டம்.. பத்திரமாக மீட்ட வீரர்கள்
2 சுவர்களுக்கு நடுவில் சிக்கி கொண்ட சிறுவன் மீட்கப்பட்டான்
சென்னை: 2 சுவருக்கும் நடுவில் சிக்கி கொண்டான் சிறுவன்.. பயந்துபோய் அலறி துடித்தவன், 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.
சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள பகுதி முண்டியம்மன்நகர்.. இங்கு வசித்து வருபவர் மணிகண்டன்.. இவரது மகன் நித்தீஷ்-. 12 வயதாகிறது.. ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறான்.

நேற்று இரவு நித்தீஷ் வீட்டு அருகில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.. பிறகு வீட்டின் முன் பகுதியில் இருந்த சுற்றுச்சுவருக்கும், அதனை ஒட்டி இருந்த ஒரு தூணுக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் நுழைய முயன்றான்.. இரண்டு சுவருக்கும் நடுவில் சிறிய அளவுதான் இடைவெளி இருந்தது.
அதற்குள் புகுந்து வெளியே வர ஆசைப்பட்டு நுழைந்தான்.. ஆனால் அவனால் வெளியே வரமுடியவில்லை.. 2 சுவருக்கும் நடுவில் சிக்கி கொண்டான்.. இதனால் பயந்து அலறினான்.. அவனது சத்தத்தை கேட்டு வீட்டிலிருந்தோர் ஓடிவந்தனர்.
அவர்கள் எவ்வளவோ பாடுபட்டும் நித்திஷை மீட்க போராடி தோற்றனர்.. செங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் சொன்னார்கள்.. அதற்குள் நித்திஷ் ரொம்பவும் டயர்டாகிவிட்டான்... விரைந்து வந்த வீரர்கள் தூணின் முன்பகுதியை சுத்தியால் லேசாக உடைத்தனர்.. நித்திஷ் டிரஸ்ஸை கத்தரிகோலால் கிழித்து அகற்றினர்.
இதற்கு பிறகு அதாவது 2 மணி நேரத்துக்கு பிறகுதான் அவனை பத்திரமாக மீட்க முடிந்தது.. உடனே முதலுதவி சிகிச்சை தரப்படவும் நித்திஷ் சரியானான்.. 2 மணி நேரத்தில் சாதுர்யமாக சிறுவனை மீட்ட தீயணைப்பு வீரர்களை அந்த பகுதி மக்கள் மனசார பாராட்டினர்.












Click it and Unblock the Notifications