120 சவரன் தங்க நகையா? ஞானசேகரனிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகை வியாபாரி.. அதிரடியில் போலீஸ்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை மூன்று நாட்கள் கஸ்டடி எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரித்துள்ளனர்.. அப்போது மேலும் பல்வேறு தகவல்கள் வெளியானதையடுத்து, அதன்பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
3 நாள் போலீஸ் காவலில் இருந்து 100 சவரன் திருட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, கார், ஜீப் போன்றவைகளை பறிமுதல் செய்துள்ள நிலையில், இப்போது சுமார் 100 சவரன் நகைகளையும் ஞானசேகரனிடமிருந்து பள்ளிக்கரணை போலீசார் மீட்டுள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறை வழக்கில், கோட்டூர்புரத்தை சேர்ந்த, ஞானசேகரன் என்ற 37 வயது நபர் கைது செய்யப்பட்டார். இவர், சென்னை பள்ளிக்கரணை பகுதிகளில், சொகுசு பங்களாக்களை குறி வைத்து, நகை, பணம் கொள்ளை அடித்தது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார்.
போலீசாரிடம் வாக்குமூலம்
அந்தவகையில், கடந்த 2019 முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளிலுள்ள வில்லா டைப் வீடுகளை குறிவைத்து, சொகுசு கார்களில் வந்து ஞானசேகரன் கொள்ளையடித்ததாக வாக்குமூலம் தந்ததாக 2 நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன.
அதாவது, பள்ளிக்கரணை பகுதியில் மட்டும் 7க்கும் மேற்பட்ட வீடுகளை நோட்டமிட்டு 250 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை கொள்ளையடித்ததாக வாக்குமூலத்தில் ஞானசேகரன் தெரிவித்துள்ளாராம்.
போலீஸ் கஸ்டடி விசாரணை
"கொள்ளையடிக்கும் நகையில், மூன்றில் ஒரு பங்கை என்னுடைய 3 மனைவியருக்கும், மற்ற இரண்டு பங்கை எனக்கும், தாய்க்கும் என, பங்கு பிரித்து கொள்வோம்" என்றும் ஞானசேகரன் வாக்குமூலம் தந்தாராம்.
இந்த வாக்குமூலத்தையடுத்து, ஞானசேகரனை 7 கொள்ளை வழக்கில் கைது செய்த போலீசார், சுமார் 100 சவரன் நகைகளை அவரிடமிருந்து மீட்டுள்ளதாகவும், மேலும் 150 சவரன் நகையை பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்து விசாரித்து வருவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன.
கூட்டாளியும் கைது - 120 சவரன் நகை
இந்நிலையில், 3 நாள் சிறப்பு காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த நகைகளை ஆலந்தூரில் பழைய நகைகளை வாங்கி விற்கும் குணால் சேட் என்பவரிடம் விற்று பணம் பெற்று, அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தியதாக ஞானசேகரன் தெரிவித்துள்ளாராம்.. இதையடுத்து நகை வியாபாரியிடம் இருந்து 120 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஞானசேகரனிடம் இருந்து சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
மூன்று நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், ஞானசேகரனை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர். இதையடுத்து பள்ளிகரணை போலீசார் திருட்டு நகைகளை வாங்கிய குணால் சேட்டை நேற்று அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள்.. அத்துடன், ஆலந்தூர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி, பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications