பிளஸ் 2 பொதுத்தேர்வு.. 12000 மாணவ மாணவிகள் ஆப்சென்ட்.. காரணம் என்ன?
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு மொழிப்பாடத்தை 12000 மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ் தேர்வினை 12,364 மாணவ மாணவிகளும், ஆங்கிலத் தேர்வை 12,696 மாணவர்களும் எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 7534 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 7, 22, 200 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.

அதில், 3, 58,201 மாணவர்கள், 4,13,099 மாணவிகள் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர். இதனைத் தவிர தனித்தேர்வர்கள் 21875 பேரும், சிறைவாசிகள் 125 பேரும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டில் 3,300 க்கும் மேற்பட்ட மையங்களில் மாணவர்கள் தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பாக கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடித்தல், விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களைப் பிடிக்க 3,200 பறக்கும் படையினர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் தேர்வறைக்குள் மாணவர்கள் செல்போன், மின் சாதனங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பாடத்தேர்வான மார்ச் 1ஆம் தேதியன்று சுமார் 12,364 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று 12ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. தேர்வை மாநிலம் முழுவதும் 12,696 மாணவர்கள் எழுதவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 பேர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வு எளிமையாக இருந்ததாகவும் ஒரு சிலருக்குக் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் மாணவர்கள் பயம் காரணமாக மாணவர்கள் தேர்வு எழுதாமல் தவிர்த்துள்ளனர்.
மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பயம், பதற்றம் காரணமாக 50000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாமல் தவிர்த்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications