Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

12ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு ரெடி? இன்றே விண்ணப்பிக்கலாம்.. தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெற்று கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.. இந்நிலையில், 12ம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை பதிவிறக்கம் செய்யும் முறை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு, கடந்த 2ம் தேதி முதல் பள்ளிகள் திறந்து செயல்பட்டு வருகிறது..

12th students answer sheet copy TN School Education 12

பள்ளிக்கு வரும் மாணவர்களை பாதுகாப்புடன் வரவேற்று கல்வியை கற்பிக்க பல்வேறு ஏற்பாடுகளை பள்ளிக் கல்வி துறை செய்திருந்தது.. குறிப்பாக,, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.5 கோடி விலை இல்லாத பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்திருந்தது.. .

அனைத்து பாட புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் பள்ளிகளுக்கு முன்கூட்டியே சென்றடைந்துவிட்டன. இது தவிர மற்ற விலையில்லாத பொருட்களும் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படுகிறது.

இன்று விடைத்தாள் நகல்

இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 7 லட்சத்து 92 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்த நிலையில், கடந்த 8ம் தேதி, ரிசல்ட் வெளியாகியிருந்தன.. இன்று விடைத்தாள் நகல் வெளியிடப்பட உள்ளது..

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கான நகல் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

படிவங்கள் பதிவிறக்கம்

மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அதே இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

அதை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து ஜூன் 5, 6, 7-ம் தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

மறு மதிப்பீடு

விண்ணப்ப கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், இதர பாடங்களுக்கு ரூ.205-ம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை தேர்வர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகை சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே, மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அறிய முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+