Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வு.. தமிழக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க இருப்பதை அடுத்து, முன்னதாக மேற்கண்ட வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த பொதுத்தேர்வுகள் மார்ச் 3 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

12th std practical exams TN School Educational Department

இன்று முதல்: இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று 7ம் தேதி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற உள்ளன. சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த செய்முறைத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இதற்காக அனைத்து பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வுக்கு தேவையான ஆய்வகப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு 22ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் நடக்கும். இதையடுத்து, பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு பிளஸ் 2 வகுப்புக்கு மே 9ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு மே 19ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மே 19ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்திருக்கிறது.

அறிவுறுத்தல்: இந்த செய்முறைத் தேர்வுகளை சரியாக நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளுக்கு முக்கிய அறுவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் சுற்றறிக்கையில் உள்ளதாவது:

- தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து எவ்வித குளறுபடியுமின்றி பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.

- ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

- சலுகை அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

- தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப் பெற்றால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்"

என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை தேர்வுத் துறை வழங்கியுள்ளது. மார்ச் 3 முதல் மார்ச் 25ஆம் தேதி வரை பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்.

அறிவிப்பு: 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறும். 10ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+