ஷோபனாவை பலாத்காரம் செய்யவில்லை.. அத்தை மகளை பிளேடால் குத்தி கொன்ற மாமன் மகன் வாக்குமூலம்

சொத்துக்காக மாமன் மகளை கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மாமன் மகள் மீது ஆவேசம்.. பிளேடால் 13 இடங்களில் அறுத்த கொன்ற வாலிபர்.. சென்னையில் பரபரப்பு-வீடியோ

    சென்னை: "ஷோபனாவை பலாத்காரம் செய்யவில்லை.. பாசமும் கிடைக்கல.. சொத்தும் கிடைக்கல.. அதனாலதான் வெறும் கொலை மட்டும் செய்தேன்" என்று 13 வயது மாமன் மகளை கொன்ற அத்தை மகன் பாபு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த தம்பதி பூபதி - உஷா. இவர்களது மகள்கள் மெர்லின், ஷோபனா. மெர்லினுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது.

    13 year old girl murder case in chennai

    பூபதி - உஷா இருவருமே சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிடவும் பூபதியின் தங்கையான வேதவள்ளிதான், ஷோபனாவை 11 வருடமாக வளர்த்து வந்தார். ஷோபனாவுக்கு வயது 13. சற்று மனநிலையும் சரியில்லாமல் இருந்ததால், 5ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டனர்.

    வேதவள்ளி ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிறார். 2 நாளைக்கு முன்பு, ஷோபனா ரத்த வெள்ளத்தில் விழுந்து இறந்து கிடந்தார். ஷோபனாவின் கழுத்து, கை, இடுப்பு, தொடை பகுதிகளில் சதைகள் கிழிந்து தொங்கி ரத்தம் கொட்டி கொண்டிருந்தது. உடம்பெல்லாம் பிளேடுகளை கொண்டே கிழிக்கப்பட்டு இருந்தன.

    உடனடியாக ஆதம்பாக்கம் போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட அவர்களும் விசாரணையை துவங்கினர். அப்போதுதான் வேதவள்ளியின் மூத்த மகன் பாபு மீது சந்தேகம் எழுந்தது. பாபுக்கு 26 வயதாகிறது. இவர்தான் சம்பவம் நடந்த சமயத்தில், வீட்டிற்கு கடைசியாக வந்துவிட்டு சென்றதாகவும், அப்போது பாபு ஆவேசமாக இருந்ததை பார்த்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தகவல் சொன்னார்கள். இதனால் பாபுவை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இப்போது கைது செய்துள்ளனர்.

    அப்போது போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "எதுவா இருந்தாலும் ஷோபனாதான்.. எனக்கு அன்பு, பாசம் எதுவுமே அவங்க கிட்ட இருந்து கிடைக்கல. இப்போ நாங்க இருக்கிற வீடு ஷோபனாவோட அம்மா-அப்பா வீடு. அதனால, எப்படியும் இந்த வீடும் ஷோபனாவுக்குதான் போயிடும் என்று நினைத்தேன். அதனால, வீட்டை விற்று எனக்கு பணம் தரும்படி அம்மாகிட்ட கேட்டேன். தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இதனால் எங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வந்துட்டே இருந்தது.

    பாசமும் கிடைக்கல, சொத்தும் எனக்கு வராதுன்னு நினைச்சுதான் ஷோபனா கொலை செய்ய முடிவு பண்ணேன். பிளேடு, கத்தி வெச்சு கொலை பண்ணேன். ஆனால் கற்பழிக்கவில்லை" என்றார். எனினும் ஷோபனாவின் அடிவயிறு, தொடை பகுதிகளில் நிறைய காயங்கள் உள்ளன. அதனால் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காக போலீசார் காத்திருக்கிறார்கள். தொடர்ந்து பாபுவிடம் விசாரணை நடந்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+