ஒரே நாளில்.. 14 ஐஏஎஸ், 20 ஐபிஎஸ் அதிகாரிகள் மொத்தமாக திடீர் டிரான்ஸ்பர்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
சென்னை: தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள், 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார். முக்கியமாக தலைமை பொறுப்புகளை நேர்மையான அதிகாரிகளை நியமித்து வருகிறது.
ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக இன்று பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

டிரான்ஸ்பர்
இன்று காலை தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னையின் முன்னாள் மாநகரக காவல் ஆணையராக இருந்த மகேஷ் குமார் அகர்வால், தற்போது, சென்னை குற்றப்பிரிவு ஏ.டிஜிபி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியாக ஆர். தினகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது கூடுதலாக 14 ஐஏஎஸ் அதிகாரிகள், 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம்
TNPSC செயலராக இருந்த நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளராக நீரஜ் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையராக ஆனந்தகுமார் நியமனம்

நியமனம்
சிப்காட் மேலாண் இயக்குநர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.நுகர்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை ஆணையராக ஆனந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி கல்வித் துறை ஆணையராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ்
ஐபிஎஸ் அதிகாரிகளில், நெல்லை மாநகர காவல் ஆணையர் அன்பு, தென்மண்டல ஐ.ஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய மண்டல ஐ.ஜி தீபக் தாமோர், கோவை மாநகர ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் பவாணீஷ்வரி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு விசாரணை பிரிவு ஐ.ஜி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை
நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினபு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் வித்ய ஜெயந்த் குல்கர்னி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் காலையில் இருந்து மொத்தமாக 14 ஐஏஎஸ், 20 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications