3வது நீதிபதி வைத்த ‘ட்விஸ்ட்’.. அந்த 15 நாள்.. பூகம்பமே வந்தாலும்? செந்தில் பாலாஜிக்கு சிக்கல்! ஆஹா!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டாலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த 15 நாட்களை காவல் காலமாக எடுத்துக்கொள்ள வேண்டுமா? கூடாதா என்பதில் இரு தரப்பும் கடுமையாக வாதங்களை வைத்த நிலையில், 3வது நீதிபதி ட்விஸ்ட் வைத்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் இரண்டு அமர்வு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். இதையடுத்து, மூன்றாவது நீதிபதியாக சி.விகார்த்திகேயனுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

சிவி கார்த்திகேயன் தீர்ப்பு: கடந்த சில நாட்களாக இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை எடுத்து வைத்தனர். இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திக்கேயன் தீர்ப்பை வாசித்தார்.
அப்போது, அமலாக்கத்துறைக்கு காவலில் எடுக்க அதிகாரம் உள்ளதா எனபது குறித்து இரு தரப்பும் வாதங்களை வைத்தார்கள். அமலாக்கத்துறையினர் காவல்துறையினர் அல்ல என கபில் சிபல் வாதத்தில் மாற்றுக் கருத்து இல்லை. அமலாக்கத்துறையினரை காவல்துறையினராக கருத முடியாவிட்டாலும் அவர்கள் புலன் விசாரணை நடத்துவதை தடுக்க முடியாது.
பரத சக்கரவர்த்தி தீர்ப்போடு உடன்படுகிறேன்: காவலில் எடுத்து விசாரிப்பது அமலாக்கத்துறையினரின் உரிமை. அந்த உரிமையை பறிக்க முடியாது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். கைது செய்யப்பட்டால் காவல் எடுக்க வேண்டியது அவசியம். கஸ்ட்டி வழங்கி பரத சக்கரவத்தி வழங்கிய உத்தரவுடன் உடன்படுகிறேன் என்று 3வது நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
அந்த 15 நாள்?: சிகிச்சை காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியுமா? முடியாதா? என்பதில் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி இரு தரப்பும் கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தது. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பது இயலவில்லை, முதல் 15 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க முடியாததால், சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்றக் காவல் காலமாக கருதக்கூடாது என துஷார் மேத்தா வாதம் செய்தார்.
முதல் 15 நாள் முடிந்துவிட்டால் அது முடிந்ததுதான், அதன்பின் கஸ்டடி கோரமுடியாது என்று கபில் சிபல் வாதிட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது என கோர முடியாது. அதற்கு எந்த சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை. கொரோனாவாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் 15 நாட்கள் முடிந்தது; முடிந்தது முடிந்தது தான் என மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும் குறிப்பிட்டார்.
அமலாக்கத்துறை கஸ்டடி: இந்நிலையில், இன்று 3வது நீதிபதி அளித்த தீர்ப்பில், செந்தில் பாலாஜியின் சிகிச்சை காலத்தை நீதிமன்ற காவலாக கருத முடியாது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாகக் கருத முடியாது. சிகிச்சைக்குப் பிறகு அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், 15 நாள் நீதிமன்றக் காவல் காலத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால் அமலாக்கத்துறை விசாரிக்க முடியாமல் போன காரணத்தால், அதை நீதிமன்றக் காவல் காலமாக கருத முடியாது என அமலாக்கத்துறைக்குச் சாதகமான உத்தரவை 3வது நீதிபதி அளித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications