தமிழகத்தில் முதல்முறையாக 16 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. 15 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 16,665 பேருக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது முதல் முறையாக 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிடுகிறது.
மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ 100 குறைப்பு- சீரம் நிறுவனம்
அந்த வகையில் இன்றைய தினம் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குணமாதல்
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,30,167 ஆகும். இன்று ஒரே நாளில் 15,114 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இது வரை 10,06,033 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் இன்று 1,10,308 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று ஒரே நாளில் 1,30,042 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 2,23,78,247 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய பாதிப்பு
இன்று ஒரே நாளில் 1,25,004 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 2,20,05,237 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்றைய நிலவரப்படி 10,239 ஆண்களுக்கும், 6,426 பெண்களுக்கும் கொரோனா புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வீடு திரும்பியவர்கள்
தமிழகத்தில் 264 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இன்று ஒரே நாளில் 98 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். இதுவரை 13,826 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.