அடுத்த 3 மணி நேரத்திற்கு.. கோவை, நீலகிரி உட்பட இந்த 17 மாவட்டங்களுக்கு செம மழை தான்.. வானிலை மையம்
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலை 7 மணியளவில் சென்னையில் இருந்து 150 கிமீ தொலைவில் இருந்தது. மணிக்கு 18 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அடுத்த மூன்று மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி,திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர்,திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்" எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாகவும் இந்த 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுவிக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் முன்னெச்சரிக்கையாக நாளை சென்னை, காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
'இதுதான் இந்தியா'.. முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்காக 5 குருத்வாராக்களை வழங்கிய சீக்கியர்கள்.. செம!