தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் உட்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தில் துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவும், இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் பழைய பதவியும் புதிய பொறுப்பும் வருமாறு.

1. சென்னை போக்குவரத்து காவல் (தெற்கு) துணை ஆணையர் எம்.குமார் இடமாற்றம் செய்யப்பட்டு தாம்பரம் போக்குவரத்து காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. சென்னை சைபர் பிரிவு-2 எஸ்.பி, சிபிச் சக்ரவர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டு தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. சிபிசிஐடி எஸ்.பி, பா.மூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டு தாம்பரம் காவல் ஆணையரக தலைமையிடம் மற்றும் நிர்வாகப்பிரிவு துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. அமலாக்கப்பிரிவு குற்றப்புலனாய்வு குழு எஸ்.பி, சுப்புலட்சுமி இடமாற்றம் செய்யப்பட்டு, தாம்பரம் காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. அம்பத்தூர் துணை ஆணையர் மகேஷ் இடமாற்றம் செய்யப்பட்டு ஆவடி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. சென்னை போக்குவரத்து காவல் (மேற்கு) துணை ஆணையர் அசோக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு ஆவடி போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. சென்னை அமலாக்கப் பிரிவு எஸ்.பி, பெருமாள் இடமாற்றம் செய்யப்பட்டு, ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. கோவைப்புதூர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4-வது பட்டாலியன் கமான்டன்ட் உமையாள் இடமாற்றம் செய்யப்பட்டு ஆவடி காவல் ஆணையரக நிர்வாகம் மற்றும் தலைமையிட பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி, மகேஸ்வரன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை அமலாக்கப் பிரிவு எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
10. சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் தீபா கணிகர் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சிறப்பு காவல்படை 8-வது பட்டாலியன் (புதுடில்லி) கமான்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. தமிழ்நாடு சிறப்பு காவல்படை 8-வது பட்டாலியன் (புதுடில்லி) கமான்டன்ட் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படை கோவைபுதூர் 4-வது பட்டாலியன் கமான்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
12. சென்னை காவல் ஆணையரக நிர்வாக பிரிவு துணை ஆணையர் மகேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டு அடையாறு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
13. சென்னை போக்குவரத்து (வடக்கு) துணை ஆணையர் பிரதீப் இடமாற்றம் செய்யப்பட்டு சென்ட் தாமஸ் மவுண்ட் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
14. சென்ட் தாமஸ் மவுண்ட் துணை ஆணையர் அருண் பாலகோபாலன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை சைபர் கிரைம் பிரிவு-2 எஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
15. சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பாலசுப்ரமணியன் சென்னை இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
16. வேலூர் சப் டிவிஷன் ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் எஸ்.பி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
17. வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications