சென்னையில் ஷாக்! அத்துமீறிய இன்ஸ்டா நண்பர்.. 17 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!
சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர் ஒருவர், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவர் கையில் காயங்களுடன் அழுதவாறு நின்றிருக்கிறார். அக்கம்பக்கத்தினர் இது குறித்து விசாரித்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் வீடு புகுந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, போலீசில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை, யானை கவுனி பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞரை கைது செய்திருக்கிறது.

சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்றபோது, சிறுமி மிகவும் பதற்றமாக காணப்பட்டார். அவரிடம் நாங்கள் பொறுமையாக விசாரித்தோம். ஆனால், அவர் எங்களுக்கு போதுமான ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. மட்டுமல்லாது சிறுமியின் கையில் இருந்த காயமும் கத்தியால் ஏற்பட்டது கிடையாது என்பதை நாங்கள் உணர்ந்தோம். எனவே, அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை செக் செய்தோம். அதில், இளைஞர் ஒருவர் சிறுமியின் வீட்டிற்குள் நுழைவது தெரிய வந்தது.
ஆனால் அவரின் கையில் கத்தி போன்ற எந்த ஆயுதங்களும் இல்லை. வந்த நபர், அதிரடியாக வீட்டிற்குள் நுழையாமல், பொறுமையாக நுழைந்திருக்கிறார். அதேபோல வெளியேறும்போதும் எந்த அவசரமும் இன்றி கேசுவலாக சென்றிருக்கிறார். எனவே சிறுமியிடம் நாங்கள் தீவிரமாக விசாரணை நடத்தினோம். அப்போதுதான் அந்த இளைஞர், சிறுமியின் இன்ஸ்டா நண்பரான யானை கவுனி பகுதியை சேர்ந்த 19 வயது காணா பாடகர் என்பது தெரிய வந்தது.
சிறுமியும், இளைஞரும் சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிரம் மூலம் நண்பர்களாக பழகியுள்ளனர். சம்பவம் நடந்த நாளன்று இளைஞர் பெரும்பாக்கத்திற்கு வேலையாக வந்திருக்கிறார். அங்கு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை சந்தித்திருக்கிறார். அப்போது வலுக்கட்டாயமாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
வீட்டில் தனியாக இருக்கும் நேரம் பார்த்து ஏன் வெளி ஆட்களை வரவழைத்தாய் என பெற்றோர்கள் திட்டுவார்கள் என்பதால், அடையாளம் தெரியாத நபர் தன்னை வன்கொடுமை செய்துவிட்டார் என்று சிறுமி பொய் கூறியுள்ளார். இறுதியாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை நாங்கள் கைது செய்திருக்கிறோம். அவர் மீது ஏற்கெனவே சில கஞ்சா வழக்குகளும் இருக்கின்றன. தற்போது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த சிறுமியை ஏமாற்றி, இன்ஸ்டா மூலம் பழகிய நண்பர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு!












Click it and Unblock the Notifications