1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்

Subscribe to Oneindia Tamil

சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் தொடர்பான பரந்தூர் விவாதம் அரசியல் எல்லைகளைத் தாண்டி, தற்போது மாநிலத்தின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி குறித்த முக்கியமான விவாதமாக மாறியுள்ளது.

ஒரு சர்வதேச விமான நிலையத்தையும், 1,700 ஏக்கர் பரப்பளவிலான சிப்காட் (SIPCOT) தொழில் பூங்காவையும் பொருளாதார ரீதியாக ஒப்பிடும் போது, இரண்டுமே வெவ்வேறான பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை. 'சிப்காட் பூங்கா, சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியைத் தருமா?' என்ற கேள்விக்கு என்ன பதில்? இந்தக் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்ல முடியாது.

Airport SIPCOT chennai Vijay Parandur SIPCOT Park vs Parandur Airport Tamil Nadu second airport debate 1700 acre SIPCOT economic impact Parandur airport vs industrial park Tamil Nadu industrial growth 2026 SIPCOT job creation Tamil Nadu Parandur airport farmland issue Tamil Nadu global investment airport SIPCOT vs Aerotropolis Tamil Nadu economic development strategy vs 1700 2026 vs SIPCOT Park Tamil Nadu Parandur Airport Debate Tamil Nadu Industrial Growth Second Airport Tamil Nadu SIPCOT Economic Impact SIPCOT Park vs Parandur Airport Tamil Nadu second airport debate 1700 acre SIPCOT economic impact Parandur airport vs industrial park Tamil Nadu industrial growth 2026 SIPCOT job creation Tamil Nadu vs 1700

விமான நிலையத்திற்கு கூடுதல் பலம்

குளோபல் என்டரி பாயின்ட்:

ஒரு சர்வதேச விமான நிலையம் என்பது வெறும் போக்குவரத்து வசதி மட்டுமல்ல, அது ஒரு பிராந்தியத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார நுழைவாயில். பன்னாட்டு நிறுவனங்களின் (MNCs) தலைவர்கள், உலகளாவிய முதலீட்டாளர்கள் ஒரு நகரத்திற்கு நேரடியாக வந்து செல்ல தடையற்ற வான்வழி போக்குவரத்து மிக அவசியம். விமான நிலையம் இல்லாத பட்சத்தில், பல பெரிய வெளிநாட்டு முதலீடுகள் அண்டை மாநிலங்களான கர்நாடகா (பெங்களூரு) அல்லது தெலங்கானாவிற்கு (ஹைதராபாத்) மாற வாய்ப்புள்ளது.

குறிப்பாக பெரிய சைஸ் விமானங்கள் அதிகளவில் இயக்கப்பட்டால் மட்டுமே பெரும் முதலீட்டாலர்கள் வருவார்கள். ஆனால் மீனம்பாக்கத்தில் இதற்கான போதுமான வசதிகள் இல்லை என்பதே தற்போதைய பிரச்சனை.

லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அசுர வேக ஏற்றுமதி (Air Cargo):

தமிழ்நாட்டில் மின்னணுப் பொருட்கள் (Electronics), மருந்துகள் (Pharmaceuticals), மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது பொருட்களை உலக நாடுகளுக்கு மிக வேகமாக அனுப்ப விமான சரக்குப் போக்குவரத்தையே (Cargo) நம்பியுள்ளன.

சிப்காட்டில் பொருட்கள் உற்பத்தியானாலும், அதை வெளிநாடுகளுக்கு வேகமாக அனுப்ப வலுவான விமான நிலைய உள்கட்டமைப்பு தேவை. இத்தகைய நிலையில் சென்னை தொழிற்துறை பகுதிக்கு ஒரு வலுவான விமான சரக்கு போக்குவரத்து கட்டமைப்பு தேவை.

சுற்றுலா மற்றும் சேவைத் துறை வளர்ச்சி:

விமான நிலையம் அமையும் போது அதைச் சுற்றி பிரம்மாண்ட நட்சத்திர ஹோட்டல்கள், மாநாட்டு மையங்கள், ஐடி பூங்காக்கள், வணிக வளாகங்கள் எனப் பன்முகத்தன்மை கொண்ட 'ஏரோட்ரோபோலிஸ்' (Aerotropolis) எனப்படும் விமான நகரப் பொருளாதாரம் உருவாகும். சிப்காட் பூங்காவால் இந்த அளவிற்கான சேவைத்துறை வளர்ச்சியைத் தனியாகக் கொண்டு வர முடியாது.

உதாரணமாக மும்பை 2வது விமான நிலையம் தான் தற்போது மொத்த மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்து வருகிறது. தற்போது இந்த விமான நிலையம் சுற்றி உருவாக்கப்பட்டும் கட்டமைப்புகள் ஒட்டுமொத்த வர்த்தக சந்தையின் இயக்கத்தை வேகப்படுத்தியுள்ளது.

சிப்காட் பூங்கா எப்படி ஈடுகொடுக்கும்?

உற்பத்தித் துறை வேலைவாய்ப்புகள்:

ஒரு விமான நிலையத்தில் பெரும்பாலும் தொழில்நுட்பம் மற்றும் சேவை சார்ந்த வேலைகளே (விமான ஊழியர்கள், பாதுகாப்பு, நிர்வாகம்) அதிகமிருக்கும். ஆனால், 1700 ஏக்கர் சிப்காட் தொழில் பூங்காவில் பெரிய உற்பத்தி ஆலைகள் அமைந்தால், அது 2 மற்றும் 3-ஆம் கட்ட நகரங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான சாதாரண மற்றும் நடுத்தரப் படித்த இளைஞர்களுக்கு நேரடித் தொழிற்சாலை வேலைவாய்ப்புகளை (Blue-collar and White-collar jobs) உடனே வழங்கும்.

விவசாயம் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு:

5,700 ஏக்கர் பரப்பளவிலான பிரம்மாண்ட விமான நிலையத்திற்குப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை அழிக்க வேண்டியிருக்கும். ஆனால், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கருடன் திட்டத்தை நிறுத்திக் கொள்வதன் மூலம், மீதமுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும், நீர்நிலைகளும், கிராம மக்களின் வாழ்விடங்களும் பாதுகாக்கப்படுகின்றன. இது நீண்ட காலச் சுற்றுச்சூழல் சமநிலைக்கு நல்லது.

குறைந்த முதலீடு:

ஒரு சர்வதேச விமான நிலையத்தைக் கட்டி முடிக்கப் பல ஆயிரம் கோடிகள் செலவாகும், 7 முதல் 10 ஆண்டுகள் வரையான நீண்ட காலமும் தேவைப்படும். ஆனால், சிப்காட் தொழில் பூங்காவை 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் உள்கட்டமைப்புகளுடன் தயார் செய்து, நிறுவனங்களுக்கு நிலங்களை வழங்கி, மிக விரைவாக உற்பத்தியையும் பொருளாதாரச் சுழற்சியையும் தொடங்கிவிட முடியும்.

சுருக்கமாகச் சொன்னால்:

1700 ஏக்கர் சிப்காட் பூங்கா மூலம், உள்ளூர் வேலைவாய்ப்பு மற்றும் உடனடி உற்பத்தித் துறை வளர்ச்சிக்குமிகச் சிறந்த பலனைத் தரும். ஆனால், ஒரு சர்வதேச விமான நிலையம் கொடுக்கக்கூடிய உலகளாவிய வர்த்தகத் தொடர்பு, பன்னாட்டு முதலீடுகள் மற்றும் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கிற்கான அசுர வேக வளர்ச்சியை சிப்காட் பூங்காவால் தனித்து வழங்க முடியாது.

எனவே, தமிழகத்தின் நீண்ட கால வளர்ச்சியைத் தக்க வைக்க, பரந்தூரைத் தவிர்த்துவிட்டு சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதியில் மாற்று இடத்தை அரசு கண்டறிந்து 2-வது விமான நிலையத் திட்டத்தைச் செயல்படுத்துவதே பொருளாதார ரீதியாகச் சரியான தீர்வாக இருக்கும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+