தமிழகத்தில்.. இடைத் தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகள்.. முழு விவரம்
தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடக்கும்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடக்கும்.
தமிழகத்தில் மொத்தம் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. இதற்கான தேர்தல் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கூட ஏற்படுத்தலாம். இந்த நிலையில் இதில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் இந்த 18 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தல் நடக்கும் தேதி : ஏப்ரல் 18
தேர்தல் நடக்கும் தொகுதிகள்:
தகுதி நீக்கம் காரணமாக காலியான தொகுதிகள்:
பெரம்பூர்
சோளிங்கர்
சாத்தூர்
விளாத்திகுளம்
பரமக்குடி
திருப்போரூர்
பூந்தமல்லி
நிலக்கோட்டை
ஆம்பூர்
குடியாத்தம்
பாப்பிரெட்டிபட்டி
ஆண்டிபட்டி
பெரியகுளம்
தஞ்சாவூர்
மானாமதுரை ஆகியவை 16 தொகுதி
ஒசூர் (பாலகிருஷ்ணா ரெட்டி தகுதி நீக்கம் காரணமாக தொகுதி)
திருவாரூர் (கருணாநிதி மரணம்)
கட்டம்: அனைத்து தொகுதிக்கும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுடன் இடைத்தேர்தல் நடக்கும்
தேர்தல் நடக்காத தொகுதிகள்: திருப்பரங்குன்றம் (ஏ.கே. போஸ் மரணம்), அரவிக்குறிச்சி, ஓட்டப்பிடாரம்
காரணம்: மூன்று தொகுதிகளிலும் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.












Click it and Unblock the Notifications