19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ‘பதவி உயர்வு’.. 2 பேர் ஏடிஜிபி.. புத்தாண்டு பரிசு கொடுத்த தமிழக அரசு!
சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 7 ஐபிஎஸ் அதிகாரிகள் ஐஜி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்க நாளான இன்று, தமிழக காவல்துறையில் பணியாற்றும் 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இதற்கான உத்தரவை உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் பிறப்பித்துள்ளார்.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, அடிக்கடி காவல்துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். பல சமயங்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும், ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் புத்தாண்டின் முதல் நாளிலேயே பதவி உயர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1999ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளான ஆனந்த்குமார் சோமனி, ஆர்.தமிழ்ச்சந்திரன் ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி.யாக தமிழ்நாடு அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜியாக பதவி உயர்வு அளித்துள்ளது தமிழக அரசு. ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகியோருக்கு ஐ.ஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 பேருக்கு டிஐஜியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. பி.ஆர்.வெண்மதி, பி.அரவிந்தன், வி.விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், டி.மகேஷ்குமார், என்.தேவராணி, இ.எஸ்.உமா, ஆர்.திருநாவுக்கரசு, ஆர்.ஜெயந்தி, ஜி.ராமர் ஆகியோருக்கும் பதவி உயர்வு வழங்கியுள்ளது.

-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications