வணிக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 வரை அதிரடி உயர்வு.. பட்ஜெட்டுக்கு முன்பாக வணிகர்களுக்கு அதிர்ச்சி
சென்னை: இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் பட்ஜெட்டுக்கு முன்பாகவே வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,899.50க்கு விற்பனையாகி வருகிறது.
2026-27 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். மொத்த நாடும் பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்புகளை எதிர்நோக்கி காத்துள்ளது.
ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை வரி சலுகை, தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஆனால் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாகே கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதமும் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகிறது.
வணிக சிலிண்டர் விலை உயர்வு
அந்த வகையில் இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ரூ.1,849.50க்கு விற்பனையாகி வந்த சிலிண்டர் ஒன்றின் விலை இன்று முதல் ரூ.1,899.50க்கு விற்பனையாகிறது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.160 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வணிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹோட்டல், தாபா, சாலையோர உணவகங்கள், வணிக வளாக ரெஸ்டாரண்ட்டுகளில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை வியாபாரிகள் பயன்படுத்தி வருகினறனர். இதனல் அவர்களுக்கு இந்த செய்தி ஷாக்காக அமைந்துள்ளது.
டெல்லி - மும்பையில் எவ்வளவு?
அதேபோல் டெல்லியில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.49 அதிகரித்துள்ளது. இதனால் டெல்லியில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.1,691.49 ல் இருந்து ரூ.1,740.50 ஆகவும், கொல்கத்தா மற்றும் மும்பையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.49.50 வரை உயர்ந்துள்ளது. இதனால் கொல்கத்தாவில் ஒரு சிலிண்டர் ரூ.1795ல் இருந்து ரூ.1,844.50 ஆகவும், மும்பையில் ரூ.1,642.50 ல் இருந்து ரூ.1,692 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
வீட்டு சிலிண்டரில் மாற்றமில்லை
இருப்பினும் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை. இது இல்லத்தரசிகளுக்கு ஓரளவு நிம்மதியை தந்துள்ளது. அதேவேளையில் இன்றைய தினம் விமானங்களுக்கான எரிபொருளான விமான எரிபொருளான ஏடிஎஃப்-இன் விலைகள் அதிரடியாக குறைந்துள்ளன.
விமான எரிபொருள் விலை உயர்வு
டெல்லியில், ஒரு கிலோலிட்டர் ஏடிஎஃப்-இன் விலை முந்தைய 778.85 டாலரில் இருந்து 778.85 டாலராக குறைந்துள்ளது. இதனால் இந்திய ரூபாயில், 1,000 லிட்டர் ஏடிஎஃப்-இன் விலை இப்போது ரூ. 91,393.39 ஆக இருக்கும், இது முந்தைய விலை ரூ. 92,323.02 உடன் ஒப்பிடும்போது குறைவாகும் சென்னையிலும் ஒரு கிலோலிட்டர் 774.26 டாலராக (இந்திய மதிப்பில் ரூ.84,781.99) ஆக இன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications