சென்னை வந்த ஆம்னி பஸ்ஸில் கட்டுக் கட்டாக ரூ.2.15 கோடி பணம்.. பார்சலை பார்த்து அதிர்ந்த போலீசார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் போலீசார் நடத்திய சோதனையில், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஆம்னி பேருந்தில் பார்சல் ஒன்றில் ரூ. 2.15 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு பிரபல ஆம்னி பஸ் நிறுவனத்தின் பேருந்து ஒன்று வந்துள்ளது. தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் போலீசார் நடத்திய சோதனையில், அந்த ஆம்னி பேருந்தில் பார்சல் ஒன்றில் ரூ. 2.15 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆம்னி பேருந்தில் ரூ. 2.15 கோடி பணம் இருந்த நிலையில், அந்த பார்சலை அனுப்பியது சென்னையைச் சேர்ந்த சூரஜ் பூரி என்பவர் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை வழவழைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications