அதிரடி.. ஆவடியில் 26 காவலர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்! குட்கா விற்பனையாளர்களால் சிக்கல்
சென்னை: குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட 26 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கஞ்சா, போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க தொடர்ந்து போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை காவல் ஆணையர்கள், எஸ்பிக்கள் தங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுபுற மாவட்டங்களில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் சில போலீசார் குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் குட்கா விற்பனையையை கண்டுக்கொள்ளாமல் இருப்பதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து ஆவடி காவல் ஆணையர் உத்தரவின்பேரில் ஆவடி போலீஸ் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருக்கும் போலீசார் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டது. அப்போது 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 போலீசார் குட்கா விற்பனையாளர்களுடன் சேர்ந்து செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 2 உதவி ஆய்வாளர்கள், 24 போலீசார் என மொத்தம் 26 பேரையும் காத்திருப்போர் பட்டிலுக்கு மாற்றி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதோடு குட்கா விற்பனை செய்பவர்கள், அதற்கு துணை புரியும் காவலர்கள் மீது நடவடிக்கை தொடரும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications