அதிரடி.. ஆவடியில் 26 காவலர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்! குட்கா விற்பனையாளர்களால் சிக்கல்
சென்னை: குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட 26 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கஞ்சா, போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க தொடர்ந்து போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை காவல் ஆணையர்கள், எஸ்பிக்கள் தங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுபுற மாவட்டங்களில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் சில போலீசார் குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் குட்கா விற்பனையையை கண்டுக்கொள்ளாமல் இருப்பதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து ஆவடி காவல் ஆணையர் உத்தரவின்பேரில் ஆவடி போலீஸ் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருக்கும் போலீசார் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டது. அப்போது 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 போலீசார் குட்கா விற்பனையாளர்களுடன் சேர்ந்து செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 2 உதவி ஆய்வாளர்கள், 24 போலீசார் என மொத்தம் 26 பேரையும் காத்திருப்போர் பட்டிலுக்கு மாற்றி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதோடு குட்கா விற்பனை செய்பவர்கள், அதற்கு துணை புரியும் காவலர்கள் மீது நடவடிக்கை தொடரும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications