'ஆத்தி போலீஸ்'.. ஆட்டோவிலிருந்து எகிறி குதித்து ஓடிய மர்ம நபர்.. பையை திறந்த சென்னை போலீஸ்க்கு ஷாக்
சென்னை: சென்னை மண்ணடியில் வாகன சோதனையின் போது 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பி ஓடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை மண்ணடி பகுதியில் வடக்கு கடற்கரை போலீசார் வாகன சோதனையில் இன்று அதிகாலை ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த பகுதியில் வந்திருந்த ஆட்டோவில் வந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அவர் முண்ணுக்கு பின் முரணாக பேசியிருக்கிறார். அப்போது அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்ய முயன்றுள்ளனர். அவர் பையுடன் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார்.

சென்னை கடற்கரை
இந்த சம்பவம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் நடந்திருந்தது.உடனடியாக போலீசார் துரத்திச் சென்ற போது, அந்த நபர் கொண்டுவந்திருந்த பையை மட்டும் தூக்கி போட்டுவிட்டுள்ளார்.

பயத்தில் தப்பி ஓட்டம்
பின்னர் கடற்கரை ரயில் நிலையத்திற்குள் சென்ற அந்த நபர், அங்கு சென்று கொண்டிருந்த ஓடும் ரயிலில் தப்பி இருக்கிறார். போலீசார் ஓடும் ரயிலில் ஏறவில்லை. ஏனெனில் ரயிலில் ஏறி அவரை பிடிக்க முயற்சிக்கும் போது, பயத்தில் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயலும் அபாயம் இருந்ததால் அவரை அப்போது போலீசார் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சி
இதனிடையே பையில் என்ன இருக்கிறது என்பதை சோதித்த போது, இரண்டு கிலோ அளவிலான 3 தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. தப்பிச் சென்ற நபருக்கு 25 முதல் 30 வயதிற்குள் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணை
ஆட்டோவை பொறுத்தவரை, அந்த நபர் ராயபுரம் ஆட்டோவில் ஏறி, சவுகார்பேட்டை செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனடிப்படையில் ஆட்டோ டிரைவரிடம் தீவிர விசாரணை செய்துவிட்டு அனுப்பி வைத்துள்ளனர். தப்பி சென்ற நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications