சென்னையை அதிரவைத்த 'பஞ்சாயத்து'.. குடிபோதையில் 'சம்பவம்' செய்த போலீசார்.. கடைசியில இப்படி ஆயிடுச்சே
சென்னையில் குடிபோதையில் ஓட்டலில் ரகளை செய்த போலீஸ்காரர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
சென்னை: திருவொற்றியூரில் ஓட்டல் ஒன்றில் மதுபோதையில் தகராறு செய்த வழக்கில் காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் கோட்டமுத்து, தனசேகர். இவர்களுடன் மேலும் 3 காவலர்கள் ஓரிரு நாட்களுக்கு முன்னர் திருவொற்றியூர் கணக்கர் தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு சாப்பிட சென்றிருக்கிறார். இந்த ஓட்டலில் பரோட்டாவும், பாயாவும் பேமஸ் என்பதால் வழக்கமாகவே ஓட்டலில் கூட்டம் அலைமோதும். சம்பவத்தன்றும் ஓட்டலில் கணிசமான அளவுக்கு ஆட்கள் இருந்திருக்கின்றனர். இந்நிலையில் சாப்பிட சென்ற காவலர்கள் பரோட்டாவை ஆர்டர் செய்துள்ளனர்.
ஆர்டர் செய்ததைப்போலவே பரோட்டா வந்திருக்கிறது. அத்துடன் வைக்கப்பட்ட பாயா சீக்கிரமாக தீர்ந்துவிட்ட நிலையில், இரண்டாவது ரவுண்ட் பாயா கேட்டிருக்கிறார்கள். அப்போது பாயா வருவதற்கு சற்று தாமதமாகியுள்ளது. இங்குதான் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. எவ்வளவு நேரம் பாயாவுக்காக வெயிட் பண்றது என சில தடித்த வார்த்தைகளால் காவலர்கள் பேசியுள்ளனர். இதை கவனித்த சக ஊழியர்கள் இப்படி பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

ரகளை
அவ்வளவுதான் உடனே காவலர்களுக்கு கோபம் வந்துவிடவே வாக்குவாதம் பெரியதாக வெடித்திருக்கிறது. பணியிலிருந்த ஓட்டல் ஊழியர்களை தரகுறைவாக பேசி, பக்கத்து டேபிளில் சாப்பிட உட்கார்ந்த வாடிக்கையாளர்களுக்கும் தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள். 30 நிமிடங்களுக்கு பின்னர் அங்கிருந்து காவலர்கள் சென்றுவிட்டனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓட்டல் உரிமையாளர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதேபோல சிசிடிவி காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பரவியது.

குடிபோதை
சம்பவம் தொடர்பாக விசாரிக்க தொடங்கிய காவல்துறை அதிகாரிகள் திருவொற்றியூர் காவலர்கள் கோட்டமுத்து மற்றும் தனசேகர் உள்ளிட்ட 5 காவலர்கள் ரகளையில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இவர்கள் சம்பவம் நடந்தபோது மது போதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவலர்கள் கோடமுத்து மற்றும் தனசேகர் இருவரையும் சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதேபோல இதர காலவர்கள் 3 பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து 2 காவலர்களும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அச்சம்
பொதுமக்களை தாக்குவது, குற்றம் உறுதி செய்யப்படாமல் இருக்கும் நிலையில் குளிக்கும்போது வழுக்கி விழுந்ததாக மாவு கட்டு போடுவது, குடிபோதையில் அராஜகம் செய்வது என தொடர்ந்து பல்வேறு சம்பவங்களில் காவல்துறையினர் சிக்கி வருகின்றனர். இப்படி இருக்கையில் காவலர்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமே தவிர தொந்தரவு செய்யக்கூடாது என்றும், மக்களிடம் கனிவுடன் நடந்துக்கொள்ள வேண்டும் எனவும் உயர் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மேற்குறிப்பிட்ட சம்பவம் இந்த அறிவுரையை மீறுவதைப்போல இருப்பதாக திருவொற்றியூர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வடசென்னை
அதே நேரத்தில் போதைப்பொருளுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னையில் உள்ள மண்டலங்களின் முதன்மையானதும், வடசென்னையின் முக்கியமான பகுதியில் திருவொற்றியூரும் ஒன்று. இந்த பகுதியில் தொடர்ச்சியாக பல குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதன் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனில் காவல்துறையினர் தீவிரமாக இயங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் ஓட்டலில் குடி போதையில் காவலர்கள் கலாட்டா செய்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications