ப்ளீஸ்.. உங்ககிட்ட தயவு செஞ்சு கேட்குறேன்! +2 ரிசல்ட்டை அறிவித்த உடனே! அன்பில் சொன்ன முக்கிய விஷயம்
சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் இன்று வெளியானது . இந்த முடிவுகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், இந்த முறை தேர்வு எழுதியவர்கள் 7.92 லட்சம் பேர் . இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7.53 லட்சம் பேர்.. மாணவியர்கள் 4.54 லட்சம் மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மாணவர்கள் 3.57 லட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மாணவிகள் தேர்ச்சி விகிதம் - 96.70% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 93.16% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.54 சதவிகிதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணை தேர்வு நடக்க உள்ளது. தேர்வை 10 ஆயிரம் பேர் எழுதவில்லை. அவர்களுக்கும் துணை தேர்வு நடக்க உள்ளது. இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
தேர்வு எழுதாதவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்கள் நேரில் சந்தித்து தேர்வு எழுத வைக்கப்படுவார்கள். ப்ளீஸ்.. உங்ககிட்ட தயவு செஞ்சு கேட்குறேன்.. துணை தேர்வு எழுதுங்கள் . துணை தேர்வை எழுதினால் இந்த வருடமே நீங்கள் கல்லூரிக்கு போகலாம். உங்கள் நண்பர்களுடன் ஒன்றாக அமரலாம்.

பயப்பட வேண்டாம். தைரியமாக தேர்வு எழுத வாருங்கள். இவர்களின் பெற்றோர்களிடம் சொல்கிறேன். அவர்களை தேர்வு எழுத அனுப்புங்கள். கடந்த முறையை விட இந்த முறை தேர்வு எழுதாமல் போனவர்கள் எண்ணிக்கை குறைந்து உள்ளது. அது நல்ல விஷயம். ஆனாலும் 10 ஆயிரம் பேர் எழுதவில்லை என்பது சரியில்லை. அவர்கள் அடையாளம் காணப்பட்டு தேர்வு எழுத வைக்கப்படுவார்கள், என்று முடிவுகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்தார்.
தேர்வு முடிவுகள்
பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மூன்றாம் தேதி முதல் தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகளே இன்று வெளியானது. கடந்த ஆண்டுகளை விட கூடுதல் விகிதத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் 98.82 சதவிகிதம் பெற்று முதலிடம்
ஈரோடு மாவட்டம் 97.98 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடம்
திருப்பூர் மாவட்டம் 97.53 சதவிகிதம் பெற்று மூன்றாம் இடம்
கோவை மாவட்டம் 97.48 சதவிகிதம் பெற்று நான்காம் இடம்
குமரி மாவட்டம் 97.01 சதவிகிதம் பெற்று ஐந்தாம் இடம்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 26,887 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் சென்டம் எடுத்துள்ளனர்
கணினி அறிவியல் பாடத்தில் 9,536 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்
வேதியியல் பாடத்தில் 3,181 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்
கணித பாடத்தில் 3,022 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்
தமிழ் பாடத்தில் 135 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்
ஆங்கில பாடத்தில் 68 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications