Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மில்லினியம் டெக்னாலஜி விருது.. டிஎன்ஏ ஆராய்ச்சியில் புரட்சி.. நோபலுக்கு இணையான பரிசை வென்ற தமிழர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்ஏ ஜீனோம் ஆராய்ச்சியில் புதிய முறையை அறிமுகப்படுத்தி, டிஎன்ஏ ஆராய்ச்சியை எளிமைப்படுத்தியதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவருக்கும் 2020ம் ஆண்டுக்கான மில்லினியம் டெக்னாலஜி பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஷங்கர் பாலசுப்ரமணியன் சென்னையை பூர்வீகமாக கொண்ட தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது..

Recommended Video

    DNA ஆராய்ச்சியில் செய்த புரட்சி.. Millennium Technology பரிசு பெற்ற தமிழன்

    பினாத்தில் இருந்து டெக்னாலஜி அகாடமி பின்லாந்து என்ற அமைப்பு மூலம் கடந்த 2004ல் இருந்து 2 வருடங்களுக்கு ஒருமுறை மில்லினியம் டெக்னலாஜி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் டெக்னலாஜி துறையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

    நோபல் பரிசு பொதுவாக பழைய பாரம்பரிய ஆராய்ச்சிகளுக்கு மட்டும் வழங்கப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்ட நிலையில் 2004ல் இருந்து மில்லினியம் டெக்னலாஜி பரிசு பின்லாந்து மூலம் வழங்கப்படுகிறது. இது டெக்னாலஜி துறையில் நோபலுக்கு இணையானதாக பார்க்கப்படுகிறது.

    எவ்வளவு

    எவ்வளவு

    இந்த பரிசை வென்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவருக்கும் 1.22 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 வருட ஆராய்ச்சிக்கு பின் இவர்கள் இந்த பரிசை பெற்றுள்ளது. பொதுவாக மனிதர்கள் தொடங்கி பல உயிரினங்கள், வைரஸ்களில் டிஎன்ஏ ஆராய்ச்சியை மேற்கொள்ள பழைய பாரம்பரிய முறைதான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    மாற்றம்

    மாற்றம்

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து Solexa என்ற நிறுவனத்தை உருவாக்கி, புதிய டிஎன்ஏ - ஜீனோம் ஆராய்ச்சி முறையை கொண்டு வந்தனர். Next Generation DNA Sequencing (NGS - என்ஜிஎஸ்) என்று அழைக்கப்படும் டிஎன்ஏ ஆராய்ச்சி முறையை கொண்டு வந்தனர். என்ஜிஎஸ் என்பது ஒரு டிஎன்ஏவை வேகமாக சோதனை செய்து, அதன் வடிவமைப்பு மற்றும் பண்புகளை கண்டுபிடிப்பது ஆகும். என்ஜிஎஸ் முறை மூலம் மிக வேகமாக, துல்லியமாக, குறைந்த செலவில் டிஎன்ஏ வடிவமைப்பை கண்டுபிடிக்க முடியும்.

    என்ஜிஎஸ்

    என்ஜிஎஸ்

    பொதுவாக புதிய வைரஸ் ஒன்று தோன்றுகிறது என்றால், அதன் டிஎன்ஏ மற்றும் ஜீனோமை சோதனை செய்து வகைப்படுத்த பல மாதங்கள் ஆகும். ஆனால் இவர்கள் உருவாக்கிய என்ஜிஎஸ் முறை டிஎன்ஏ ஆராய்ச்சி மூலம் மிக வேகமாக, துல்லியமாக வெறும் 1000 டாலர் செலவில் டிஎன்ஏ ஆராய்ச்சியை செய்ய முடியும். இதற்கு முன் இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளை செய்ய பல மில்லியன் டாலர் செலவு ஆகும்.

     வேகம்

    வேகம்

    இவர்கள் இந்த புதிய வகை டிஎன்ஏ ஆராய்ச்சியை உருவாக்கியதோடு, அதை உலகம் முழுக்க வேகமாக கொண்டு சென்றனர். முக்கியமாக கொரோனாவின் ஜீனோம் ஆராய்ச்சியில் இவர்கள் உருவாக்கிய என்ஜிஎஸ் முறை பெரிதும் உதவியது. இதுதான் கொரோனா வேக்சின்கள் வேகமாக உருவாக முக்கிய காரணமாக இருந்தது. கடந்த வருடம் அளிக்கப்பட வேண்டிய விருது கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த வருடம் அளிக்கப்பட்டுள்ளது.

    எப்படி செய்தனர்

    எப்படி செய்தனர்

    இவர்களின் புதிய என்ஜிஎஸ் வகை டிஎன்ஏ ஆராய்ச்சி மூலம் ஒரே நாளில் ஜீனோம்களை ஆராய்ச்சி செய்து வகைப்படுத்த முடியும். ஒரு டிஎன்ஏவில் உள்ள பல மில்லியன் பகுதிகளை ஒரே நேரத்தில் இதன் மூலம் ஆற்ற முடியும். டிஎன்ஏவை சிறு சிறு பகுதிகளாக பிரித்து, ஒரே நேரத்தில் அந்த பல மில்லியன் பகுதிகளை எளிதாக சோதனை செய்து, ஜீனோக்களை வகைப்படுத்தி, கணினி மூலம் டிஎன்எவை எளிதாக வகைப்படுத்தும் முறையைதான் ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவரும் உருவாக்கி உள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+